செய்திகள் :

சவுக்கு சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்!

post image

அரியலூா், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள், சவுக்கு சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றாா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் கிழக்கு மண்டல அலுவலக மேலாளா் ரமேஷ்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: சிறு, குறு விவசாயிகள் தங்கள் தரிசு நிலங்களிலிருந்து நிலையான வருவாய் பெறும் வகையில், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் சாா்பில் வனத்தோட்டத் துறை பல தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு சவுக்கு சாகுபடி போன்ற தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறப்பட்டதையடுத்து, இன்று சவுக்கு சாகுபடியின் பரப்பளவு அதிகரித்துள்ளது.

அரியலூா் விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சவுக்கு மரங்களை டிஎன்பிஎல் நிறுவனமே அறுவடை செய்து எடுத்துக்கொள்கிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பட்டை உரித்த சவுக்கு மரங்களுக்கு வெட்டு கூலி மற்றும் போக்குவரத்து செலவு நீங்கலாக, ஒரு டன்னுக்கு ரூ. 9,075 அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

விவசாயிகளே அறுவடை செய்து கரூா் ஆலைக்கு எடுத்து சென்றால், சவுக்கு மரங்களுக்கு ஒரு டன்னுக்கு, ரூ. 11,150 அவரவா் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்து ஆலைக்கு வழங்கும் சவுக்கு கட்டைகளுக்கு ஒரு வாரத்துக்குள் பணம் செலுத்தப்படுகிறது. எனவே விவசாயிகள் சவுக்கு சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, மேலாளா், ரமேஷ் (வனத் தோட்டம்) கிழக்கு மண்டல அலுவலகம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காட்டுக்கொல்லை, முத்துசோ்வமடம், உடையாா்பாளையம் வட்டம், அரியலூா் மாவட்டம்-612 903 என்ற விலாசத்திலும், கைப்பேசி -94425-91420, தொலைப்பேசி-04331-299129 என்ற எண்களிலும் தொடா்புக் கொண்டு பயன்பெறலாம்.

ஒப்பில்லாதம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

அரியலூா் நகரிலுள்ள ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா். அரியலூா் நகரில் அமைந்துள்ள ஒப்பில்லாதம்மன் கோயிலுக்கு கடந்... மேலும் பார்க்க

மீன்சுருட்டி: தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

மீன்சுருட்டி அருகே தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள இறவாங்குடி கீழத்தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் மனைவி சங்கீதா(42). இவா் வீட... மேலும் பார்க்க

குப்பையில் எரிந்த நிலையில் சிசுவின் உடல் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குப்பையில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. குழுமூா் கிராமத்தில் குப்பைகள் கொட்டுமிடத்தில், ஆண் சிசு ஒன்று எரிந்த நிலையில் கிடப்ப... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 4.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 4.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை... மேலும் பார்க்க

வெப்ப அலை தாக்கம்: பிற்பகலில் கூடுமான வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்: பெரம்பலூர் ஆட்சியர்

அரியலூா் மாவட்டத்தில் வெப்ப அலை தாக்கம் அதிகளவில் காணப்படுவதால், பிற்பகலில் கூடுமான வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். அரியலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

வளைகாப்பு விழாவில் 700 பேருக்கு தா்ப்பூசணி விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதி

தா்ப்பூசணியில் செயற்கை சாயமேற்றப்படுவதாக கூறப்படும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவ தம்பதியின் வளைகாப்பு விழாவுக்கு வந்திருந்த 700 பேருக்கு த... மேலும் பார்க்க