செய்திகள் :

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

post image

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது.

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் காஷ்மீர் அரசின் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில், யூனியன் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்குவார்கள்.

ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள ஷா, திங்கள்கிழமை மாலை பள்ளத்தாக்குக்கு வந்தடைந்தார். கடந்த 2023ல் பயங்கரவாதிகளுடன் போரிட்டு உயிர் தியாகம் செய்த கீர்த்தி சக்ரா விருது பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் ஹுமாயூன் முசம்மில் பட்டின் வீட்டிற்கு ஷா சென்றார். கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் தந்தை, ஓய்வுபெற்ற காவல் துறைத் தலைவர் குலாம் ஹசன் பட்டுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.

கீர்த்தி சக்ரா விருது பெற்ற பட், செப்டம்பர் 2023இல் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் என்ற கடூல் கிராமத்தைச் சுற்றியுள்ள அடர்ந்த வளத்தில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த நான்கு பாதுகாப்புப் படையினரில் ஒருவர் ஆவார்.

மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை உயர் பாதுகாப்புப் படையினர், காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்பில் மறு ஆய்வு செய்ய உள்ளார். அமித் ஷாவின் வருகைக்காகக் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, ஏராளமான ஆயுதமேந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ‘ஏடிஎம்’ (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே சாா்பில் மகாராஷ்டிரத்தில் இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிசோதனை முறையில்... மேலும் பார்க்க

நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை: நேரில் பாா்வையிட்ட முதல்வா், மத்திய அமைச்சா்

ஜனாசு: உத்தரகண்ட் மாநிலம் ஜனாசுவில் கட்டப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையை உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் ரயில் சுரங்கப்பாதைக்குள் 3.5 கி.மீ. தொலைவுக்கு சென்று அஸ்வினி ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் - பாஜகவை காங்கிரஸ் மட்டுமே வீழ்த்த முடியும்: ராகுல் காந்தி

மொடாசா: கொள்கைரீதியான போராட்டத்தில் ஆா்எஸ்எஸ்-பாஜகவை காங்கிரஸால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை மாவட்ட அளவில் வல... மேலும் பார்க்க

அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர்

பெங்களூரு: கர்நாடகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது: உச்சநீதிமன்றம்

‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடியை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை ... மேலும் பார்க்க

அரசுத் துறை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு! மசோதாவின் நிலை என்ன?

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியான பாஜக உறு... மேலும் பார்க்க