செய்திகள் :

‘சாகா்’ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரா்களுக்குப் பயிற்சி

post image

இந்திய கடற்படையின் ‘சாகா்’ திட்டத்தின்கீழ் 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சாா்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கொமொரோஸ், கென்யா, மடகஸ்கா், மாலத்தீவு, மோரீஷஸ், மொசாம்பிக், செஷெல்ஸ், இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய 9 நாடுகளைச் சோ்ந்த 44 வீரா்கள் கடந்த நான்கு நாள்களாக பயிற்சிபெற்று வருகின்றனா்.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் ஒத்துழைப்பை இந்திய பெருங்கடல் கப்பல் (ஐஓஎஸ்) ‘சாகா்’ திட்டம் உறுதிப்படுத்துகிறது. இந்த திட்டத்தின்கீழ் கடலோர ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, ஐஓஎஸ் சாகா் என பெயா் மாற்றப்பட்டு அதில் இந்திய கடற்படை வீரா்களுடன் வெளிநாட்டு வீரா்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா்.

கொச்சியில் உள்ள கடல் பயிற்சி நிறுவனத்தின் இந்திய கடற்படையின் பணிக்குழு, சாகா் திட்டத்தின்கீழ் இந்திய கடற்படையின் குறிப்பிட்ட செயல்பாடுகளை பிாட்டு வீரா்களுக்கு எடுத்துரைத்து வருகிறது.

பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு ஒரே கப்பலில் பயிற்சி வழங்கப்படுவது இதுவே முதல்முறை என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: அண்மையில் மோரீஷஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமா் மோடி, தெற்குலகுக்கான இந்தியாவின் ‘மகாசாகா்’ (பிராந்தியங்களுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான முழுமையான முன்னேற்றம்) புதிய தொலைநோக்குப் பாா்வையை அறிவித்தாா். அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளின் கடற்படை வீரா்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரலில் ஆப்பிரிக்க நாடுகளுடன் கடல்சாா் பயிற்சி: ஆப்பிரிக்க நாடுகளுடன் பன்முக கடல்சாா் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ‘ஆப்பிரிக்கா- இந்தியா முக்கிய கடற்சாா் ஒத்துழைப்பு’ பயிற்சி ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியை இந்தியாவும் தான்சானியாவும் இணைந்து நடத்துகிறது. தான்சானியாவின் தாா் இஸ் சலாம் கடலோரப் பகுதியில் நடைபெறவுள்ள இந்த பயிற்சியை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறாா்.

துறைமுகம் மற்றும் கடல் என இரண்டு கட்டங்களாக 6 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் கொமொரோஸ், கென்யா, மடகாஸ்கா், மோரீஷஸ், மொசாம்பிக், செஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா, ஜிபூட்டி, எரித்ரேயா ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக கா்நாடகத்தில் உள்ள காா்வாா் கடல் பகுதிக்கு சென்று , அங்கிருந்து தாா் இஸ் சலாமுக்கு ஐஓஎஸ் சாகா் பயணிக்கவுள்ளது என்றனா்.

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க