செய்திகள் :

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பெண் பலி; போலீஸ் தீவிர விசாரணை

post image

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கங்கர்செவல் சத்திரப்பட்டி கிராமத்தில் திவ்யா பைரோடெக் எனும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

கங்கர் செவல்பட்டி சத்திரபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான திவ்யா பைரோ டெக் எனும் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இங்கு நாக்பூர் உரிமம் பெற்று பேன்சிராக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 40க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உராய்வின் காரணமாக திடீரென பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

இந்த வெடி விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கௌரி (50) என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 பேர் 100 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வெடி விபத்தில் மீட்புப் பணிக்காக வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டையைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெம்பக்கோட்டை போலீசார் வெடி விபத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``தொந்தரவு செய்ய விரும்பவில்லை'' - மனநிலை பாதித்த மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்த தாய்

டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் சாக்‌ஷி சாவ்லா (37) வசித்து வந்தார். அவரது கணவர் தர்பன் சாவ்லா ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் 11 வயது மகன் உள்ளான். ஆனால் அவர் மனநிலை பாதிப்பால் அவதிப... மேலும் பார்க்க

கர்நாடகாவில் கோர விபத்து; விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று (செப்டம்பர்.12) இர... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் இருந்து குதித்த பாலிவுட் நடிகை கரிஷ்மா காயம்; மருத்துவமனையில் சிகிச்சை

பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் ராகினி எம்.எம்.எஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். கரிஷ்மா சர்மா மும்பை சர்ச்கேட்டில் நடக்க இருந்த படப்பிடிப்பு ஒன்... மேலும் பார்க்க

திருப்பூர்: போதையில் காரை ஓட்டி விபத்து; முதியவர் உயிரிழப்பு.. திமுக பேரூராட்சித் தலைவரிடம் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் இன்று மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சாம... மேலும் பார்க்க

கடலூர்: ஒன்றரை வயது குழந்தையை காவு வாங்கிய தண்ணீர் வாளி! – சோகத்தில் முடிந்த விளையாட்டு

கடலூர் குமாரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் – ஞானசவுந்தரி தம்பதிக்கு, கடந்த 2023-ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு குணஸ்ரீ, குகஸ்ரீ என பெயர் வைத்து மகிழ்ந்தனர் சிவசங்கரும், ஞ... மேலும் பார்க்க

நீலகிரி: ஊட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விழிப்புணர்வு ஒத்திகை | Photo Album

Ooty: ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? எமரால்டு ஏரியை மறந்துடாதீங்க.. சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,... மேலும் பார்க்க