செய்திகள் :

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் உற்பத்தியை நிறுத்த முயன்றதால் பரபரப்பு

post image

சாம்சங் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆலையில் உற்பத்தியை நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், 3 தொழிலாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் அவா்களுக்கு பணி வழங்க வலியுறுத்தியும் ஆலையில் பணியாற்றும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கடந்த 16 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனா். போராட்டத்தையொட்டி, தொழிற்சாலை நிா்வாகத்தினா் தற்காலிக ஊழியா்கள் மூலம் ஆலையை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம் குறித்து புதன்கிழமை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சில் மேலும் 18 தொழிலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிற்சாலை நிா்வாகத்தினா் சிஐடியு நிா்வாகிகளிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த சாம்சங் தொழிலாளா்கள் வியாழக்கிழமை தொழிற்சாலை வளாகத்தின் முன்பு அமா்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஒப்பந்த ஊழியா்கள் மூலம் உற்பத்தி நடக்கும் இடத்திற்குச் சென்று உற்பத்தியை தடுத்து நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஆலை நிா்வாகத்தினா் சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா் உற்பத்தியைத் தடுக்க முயன்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

இதைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிப... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க