செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி: துபை திடலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

post image

இந்தியா, பாகிஸ்தான் உள்பட உலகின் முன்னணியின் இருக்கும் முதல் 8 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் இன்று(பிப்.19) கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து மோதிவருகின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்கான பாகிஸ்தான் செல்லாத இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை நாளை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த நிலையில் துபை பன்னாட்டு கிரிக்கெட் மைதானம் யாருக்கு சாதகம் என்பதைப் பார்ப்போம்!

இந்திய அணி லீக் சுற்றில் மொத்தம் 3 போட்டிகளில் துபை மைதானத்தில் விளையாடவிருக்கிறது. துபையில் பகல் நேரங்களில் அதிகளவில் வெப்பம் மற்றும் இரவு நேரங்களில் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால் வேகப்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க...கராச்சி திடல் மேல் பறந்த போர் விமானங்கள்..! பதற்றமடைந்த நியூஸி. வீரர்கள், ரசிகர்கள்!

துபை பன்னாட்டு கிரிக்கெட் மைதானம் சேஸிங்க்கு சாதகமா?

குறைந்தபட்சம் 50 போட்டிகளை நடத்திய பன்னாட்டு மைதானங்களில் துபை மைதானம் இதுவரை 58 போட்டிகளை நடத்தியுள்ளது. அதில், 34 முறை சேஸிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளன.

வேகப்பந்து வீச்சின் சொர்க்கம்

சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச லீக் இ20 போட்டியில் துபை மைதானத்தில் 15 போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், 11 முறை சேஸிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளன. அதுமட்டுமின்றி இந்தத் தொடரில் 116 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களும், 54 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மைதானத்தால் இந்திய அணிக்கு பாதிப்பா?

இந்திய அணியில் குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட 5 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சுக்கு ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா உள்ளனர். முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகவும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க... சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித்..! பாண்டிங் ஆதரவு!

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க