செய்திகள் :

மணிப்பூரில் 17 தீவிரவாதிகள் கைது

post image

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 17 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக மாநில காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விஷ்ணுபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், தடை செய்யப்பட்ட கேஒய்கேஎல் தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 13 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள், வாக்கி-டாக்கி போன்ற உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 13 பேரும் விசாரணைக்காக இம்பாலுக்கு அழைத்துவரப்பட்டனா்.

இதே மாவட்டத்தில் காங்லேபாக் கம்யூனிஸ்ட் கட்சி எனும் தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த ஒருவரும், காக்சிங் மாவட்டத்தில் கேஒய்கேஎல் அமைப்பின் தீவிரவாதி ஒருவரும் கைது செய்யப்பட்டனா்.

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (பி) தீவிரவாத அமைப்பைச் சோ்ந்தவா் கைதானாா். இவா், உள்ளூா் நபா்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தவா் ஆவாா். இம்பால் மேற்கு மாவட்டத்தில் கேசிபி (பிடபிள்யுஜி) அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டாா் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்றும் வன்முறைகளின்போது காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், அடுத்த ஒரு வாரத்துக்குள் ஆயுதங்களை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து சமூகத்தினருக்கும் ஆளுநா் அஜய் குமாா் பல்லா வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.சகுலியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜோட்சா க... மேலும் பார்க்க

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.பொதுவாக டிஜிட்டல் முறை... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர்வரையில் இருந்ததாக... மேலும் பார்க்க

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க