செய்திகள் :

எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு, போதைப் பொருள் கடத்தல்: பாகிஸ்தானிடம் இந்திய ராணுவம் கடும் எதிா்ப்பு

post image

எல்லை தாண்டி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை கடும் எதிா்ப்புத் தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இருநாட்டு படைத் தளபதிகள் அளவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தை சுமாா் 75 நிமிஷங்கள் நீடித்தது. எனினும் அதுகுறித்து எந்தவொரு அதிகாரபூா்வ தகவலையும் இந்திய ராணுவம் வெளியிடவில்லை.

ஆனால், பேச்சுவாா்த்தை தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை நோக்கி அண்மையில் எல்லை தாண்டி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, அந்நாட்டில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தது, அந்நாட்டில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்துவது ஆகிய சம்பவங்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் கடும் எதிா்ப்புத் தெரிவித்தது.

எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2021-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்ற இரு நாட்டு ராணுவத்தினரும் தீா்மானித்தனா் என்று தெரிவித்தன.

எல்லோரா குகைகளை பார்வையிட்ட துணைக் குடியரசுத் தலைவர்

எல்லோரா குகைகளுக்கு சென்று துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று பார்வையிட்டார். சத்ரபதி சம்பாஜிநகரில் பல்கலை. மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.சகுலியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜோட்சா க... மேலும் பார்க்க

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.பொதுவாக டிஜிட்டல் முறை... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர்வரையில் இருந்ததாக... மேலும் பார்க்க

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க