செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ. 869 கோடி இழப்பு! வீரர்களின் ஊதியம் 90% குறைப்பு!

post image

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 869 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியத்தில் 90 சதவிகிதத்தை குறைத்துள்ளனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - 2025 போட்டிகள் பிப். 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் துபை மைதானத்தில் நடத்தப்பட்டது.

இந்த தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மொத்தம் ரூ. 869 கோடி செலவு செய்துள்ளனர். கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மூன்று மைதானங்களை புணரமைக்கும் பணிகளுக்காக ரூ. 503 கோடி செலவு செய்துள்ளனர்.

ஆனால், லீக் ஆட்டங்களில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியது. இந்தியாவுக்கு எதிராக துபையில் விளையாடிய நிலையில், மற்றொரு போட்டி மழையால் ரத்தானது.

இதையும் படிக்க : உம்ரான் மாலிக் விலகல்

லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியதால் அரையிறுதி, இறுதி சுற்றுகளில் பாகிஸ்தான் அணி விளையாடவில்லை.

இதனால், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளை காண பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால் பெரும் இழப்பை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சந்தித்துள்ளது.

ஐசிசி நிதி, விளம்பரம் போன்றவை மூலம் வெறும் ரூ. 52 கோடி மட்டுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாயாக கிடைத்துள்ளது.

இதன்விளைவாக, சாம்பியன்ஸ் டிராபில் விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியத்தில் 90 சதவிகிதமும் ரிசர்வ் வீரர்களின் ஊதியத்தில் 87.5 சதவிகிதமும் பிடித்தம் செய்துள்ளனர்.

ஐபிஎல்லுக்குப் பின் வாழ்க்கையில் முக்கியப் பாடங்களை கற்றுக் கொண்டேன்! -ஹார்திக் பாண்டியா

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் வாழ்க்கையில் சில முக்கிய பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி... மேலும் பார்க்க

வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் வெளிநாட்டுப் பயணங்களில் குடும்பங்கள் வீரர்களுடன் பயணிப்பதை ஆதரித்து பேசியுள்ளார்.பிஜிடி தொடரில் இந்திய அணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியி... மேலும் பார்க்க

விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குக... மேலும் பார்க்க

நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!

நியூசிலாந்து வீரர் மீது மோதிய பாகிஸ்தான் அணி வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொ... மேலும் பார்க்க

ரஜத் படிதார் ஆர்சிபியை நீண்ட காலம் வழிநடத்துவார்: விராட் கோலி

ரஜத் படிதார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நீண்ட காலத்துக்கு கேப்டனாக வழிநடத்துவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தே... மேலும் பார்க்க

ரமலான் நோன்புடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்! திடலில் மயங்கி விழுந்து பலியான சோகம்!

ஆஸ்திரேலியாவில் நோன்புடன் விளையாடிய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் திடலில் மயங்கி விழுந்து பலியானார்.பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைல் ஸஃபர் கான் என்ற கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கிளப... மேலும் பார்க்க