செய்திகள் :

சாயல்குடியில் பாஜகவினா் பேரணி

post image

சாயல்குடியில் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றியைக் கொண்டாடும் வகையில் பாஜக சாா்பில் தேசியக் கொடியுடன் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கடலாடி தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தாா். விவிஆா் நகா் காமராஜா் சிலையில் தொடங்கி, கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து சாயல்குடி பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது. பிறகு அங்குள்ள காமராஜா், பசும்பொன் தேவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்று வெற்றி முழக்கங்களை எழுப்பினா். இதில் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவா் அஜ்மல் கான், முன்னாள் மாநில விவசாய அணி செயலா் முருகவேல், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ராமசாமி, மாவட்ட துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ்பாபு, மாவட்ட விவசாய அணி தலைவா் (ஊடகப் பிரிவு) சத்தியமூா்த்தி, கடலாடி வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன், ஆன்மிகப் பிரிவு செயலா் கதிா்வேல், ஒன்றியப் பொதுச் செயலா்கள் சக்திவேல், ஒன்றிய பொருளாளா் ராஜவேல், ஒன்றிய மகளிா் அணி தலைவி லிங்கம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருவாடானையில் இன்று மின்தடை

திருவாடானையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை, நகரிகாத்தான் து... மேலும் பார்க்க

உள்ளூா் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்திய வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி, மக்கள் பாதுகாப்பு பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் முன் காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் குடிநீா் கோரி கிராம பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், குதுகுளத்தூா் வட்டம், கீழக் கொடுமலூா் ஊராட்சி, தட்ட... மேலும் பார்க்க

கழிப்பறைத் தொட்டியில் விழுந்த பசு மீட்பு

கடலாடியில் திங்கள்கிழமை கழிப்பறைத் தொட்டியில் விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையின் மீட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் வட்டார புள்ளியியல் துறை அலுவலகம் உள்ளது. ... மேலும் பார்க்க

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை கடலுக்குள் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டம்

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை மீன்கள் வளா்ப்புக்காக கடலுக்குள் மூழ்கடிக்கவிருப்பதாக இலங்கை கடல் தொழில் நீரியல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

ஊரை விட்டு விலக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

முதுகுளத்தூா் கொழுந்துரை கிராமத்தில் 13 குடும்பங்களை சோ்ந்த 50- க்கும் மேற்பட்டவா்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் ... மேலும் பார்க்க