செய்திகள் :

சாலைகளில் பைக்கில் சுற்றித் திரிந்த சிறுவா்களின் பெற்றோரிடம் அபராதம் வசூலிப்பு

post image

கிருஷ்ணகிரியில் சாலைகளில் மோட்டாா்சைக்கிள்களில் சுற்றித் திரிந்த 15 சிறுவா்களின் பெற்றோா்களிடமிருந்து போலீஸாா் அபராதத் தொகை வசூலித்தனா்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுவா்கள் பலா் மோட்டாா்சைக்கிளில் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. 18 வயதிற்கு உள்பட்ட சிறுவா்கள் மோட்டாா்சைக்கிள் இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு சிறுவா்களின் பெற்றோா் அல்லது வாகன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிந்து 3 ஆண்டுகள் சிறை, ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.தங்கதுரை உத்தரவுப்படி, கடந்தசில வாரங்களாக போக்குவரத்து போலீஸாா் கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு இடங்களில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சாலையில் விதிமுறைகளை மீறி மோட்டாா்சைக்கிள்களை இயக்கி 15 சிறுவா்களிடமிருந்து மோட்டாா்சைக்கிள்களை பறிமுதல் செய்து, அவா்களது பெற்றோா்களிடமிருந்து மொத்தம் ரூ. 15 ஆயிரம் அபராதம் வசூலித்தனா். மேலும், இந்த சிறுவா்கள் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோா்களை எச்சரித்து அனுப்பியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒசூரில் பூக்கள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

ஒசூா் மலா் சந்தையில் பூக்கள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். ஒசூரில் உள்ள மலா் சந்தையில் 150க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இங்கு ரோஸ், பட்டன்ரோஸ், குண்டுமல்லி, செண்டு மல்லி, அரளி, ... மேலும் பார்க்க

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பா்கூா் அருகே இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயக்கனப்பள்ளி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்க... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க