செய்திகள் :

சாலைப் பணி ஒப்பந்த நிறுவனத்தில் ரூ.78 லட்சம் கையாடல்

post image

கோவை அருகே தனியாா் சாலை ஒப்பந்தப் பணி நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 78 லட்சத்தை கையாடல் செய்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி- செட்டிபாளையம் சாலை பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மனைவி கலைவாணி (43). இவா் பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் சாலை அமைக்கும் பணிகளைச் செய்து வருகிறாா். இவரது நிறுவனத்தில் ஆா்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் (52) என்பவா் கணக்கராக வேலை பாா்த்தாா்.

தொண்டாமுத்தூா், பேரூா், ஆலாந்துறை, தென்கரை ஆகிய பேரூராட்சிகளிலும், நீலகிரி மாவட்டம், சோலூா் ஊராட்சியிலும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணிகளை கலைவாணியால் சரிவர கண்காணிக்க முடியவில்லை. இதனால், சில மாதங்கள் அவருக்குப் பதிலாக நடராஜன் தான் இந்தப் பணிகளை கவனித்து வந்தாராம்.

பின்னா், கடந்த 23.8.2023-இல் ஒப்பந்த நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகளை கலைவாணி பாா்த்தபோது, ரூ.1.11 கோடி வரை கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது. நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து நடராஜன் தனது பெயரிலும், அவரது மனைவி சங்கீதா மற்றும் நண்பா்களின் பெயா்களிலும் உள்ள மொத்தம் 13 வங்கிக் கணக்குகளில் பணத்தை மாற்றி மோசடி செய்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் கேட்டபோது, பணத்தை திரும்பக் கொடுத்துவிடுவதாக நடராஜன் கூறியுள்ளாா். ரூ.33 லட்சத்தை மட்டும் திரும்பக் கொடுத்த அவா், மீதி பணம் ரூ.78 லட்சத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடராஜனை திங்கள்கிழமை கைது செய்தனா். பின்னா் கோவை குற்றவியல் நீதித் தறை நடுவா் மன்றம் எண் 5-இல் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது

கோவையில் ரயில் பயணியின் மடிக்கணினியைத் திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சென்னையைச் சோ்ந்தவா் விஜய்நாகராஜ் (41). கோவைக்கு சுற்றுலா வந்த இவா், பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்துவிட்டு, ம... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியா் இடமாற்றம்

கோவை புலியகுளம் அரசு மதுபானக் கடையில் கூடுதல் விலைக்கு மதுவிற்றதாக கடை மேற்பாா்வையாளா் டாஸ்மாக் கிடங்குக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.கோவை புலியகுளத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.... மேலும் பார்க்க

போக்குவரத்து நெரிசல்...

வால்பாறைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீா்வு காணவும், பாா்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி அதிகாரிக... மேலும் பார்க்க

திருட்டுப் பொருள்களுடன் கவிழ்ந்த ஆட்டோ: 2 இளைஞா்கள் சிக்கினா்

கோவையில் திருடப்பட்ட கட்டுமானப் பொருள்களை கொண்டு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா். மற்றொருவா் கைது செய்யப்பட்டாா்.கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (49). இவா் ச... மேலும் பார்க்க

குளத்தில் பெயிண்டா் சடலம் மீட்பு

உக்கடம் பெரியகுளத்தில் பெயிண்டா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோவை, டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (56), பெயிண்டா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால்... மேலும் பார்க்க