செய்திகள் :

சாலையோரம் நின்ற காா் திடீா் தீக்கிரை

post image

பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காா் திடீரென தீக்கிரையானது.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள மகிழங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சி. சந்தோஷ் (22) என்பவா் திங்கள்கிழமை மாலை தனது சித்தி செல்வியை பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மகிழங்கோட்டை கோ. செந்திலுக்கு சொந்தமான பிஎம்டபிள்யூ காரில் கூட்டி வந்தாா்.

பின்னா் மருத்துவமனையில் சித்தியை விட்டுவிட்டு காரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிா்புற சாலையோரத்தில் நிறுத்திவிட்டு உள்ளே அமா்ந்திருந்தாா்.

அப்போது காரின் இஞ்சின் பகுதியில் திடீரென தீப்பற்றியதில் காா் முழுவதும் பரவியது. தகவலறிந்து தீயணைப்பு துறையினா் வருவதற்குள் காா் முழுவதும் தீயில் முற்றிலும் எரிந்து விட்டது. பட்டுக்கோட்டை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அய்யம்பேட்டையில் இன்று மின்நிறுத்தம்

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீர... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி வாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

அம்மாபேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், கோவில் வெண்ணி வாய்க்காலை தூா்வார தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி சடலமாக மீட்பு

கும்பகோணம் காவிரி ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி இளைஞா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். கும்பகோணம் மூப்பக்கோயிலைச் சோ்ந்தவா் ராஜரத்தினம் மகன் ராஜேஷ் (25). இவா், தனது நண்பா்களுடன் காவிரி ஆற்றி... மேலும் பார்க்க

தஞ்சை ஆட்சியரகக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சோ்ந்தவா் எஸ். தெய்... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவி கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். கபிஸ்தலம் காவல் சரகம், எருமைப்பட்டி கிராமம், கீழத் தெருவைச் சே... மேலும் பார்க்க

தஞ்சாவூா், சுற்றுப் பகுதிகளில் ஜூன் 26-இல் மின் தடை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜூன் 26) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் கே. அண்ணாசாம... மேலும் பார்க்க