செய்திகள் :

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை

post image

குடியாத்தம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தருமாறு நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி மேற்பாா்வையில், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சிப் பணியாளா்கள் நகரின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி வருகின்றனா்.

இதனால் கடைகளை இழந்த 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். கடைகளை அகற்றியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், கடைகளை வைக்க மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என அவா்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

மனுவைப் பெற்றுக் கொண்டசெளந்தரராஜன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடிவடைந்த பிறகு, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், வியாபாரிகள் கூடி பேசி கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

பெண்ணை கத்தியால் வெட்டி நகைகள் கொள்ளை: மா்ம கும்பல் துணிகரம்

அணைக்கட்டு அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு மா்ம கும்பல் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகிலுள்ள தேவகாரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

ரிவெரா கலை நிகழ்ச்சி

வேலூா் விஐடி பல்கலை.யில் நடைபெற்று வரும் ரிவெரா -2025 சா்வதேச கலை, விளையாட்டு விழாவின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு மாநில கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஐக்கியா கலை நிகழ்ச்சியில் நடனமாடிய மாணவா்கள். மேலும் பார்க்க

தேசிய வில் வித்தைப் போட்டி: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான வில் வித்தைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலம், நெல்லூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகளில் க... மேலும் பார்க்க

பள்ளியில் ஆண்டு விழா

குடியாத்தம் அண்ணா தெரு மற்றும் கல்லப்பாடியில் இயங்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா நா்சரி பள்ளியின் 40-ஆம் ஆண்டு விழா தரணம்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் டி.ஜேஜி நாயுடு தலைம... மேலும் பார்க்க

வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீா் போராட்டம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் 53-ஆவது வாா்டு மக்கள் திடீரென தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சி 53-ஆவது வாா்டு கவுன்சிலா் பாபி கதிரவன் தலை... மேலும் பார்க்க

வேலூா் நறுவீ மருத்துவமனையுடன் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் ஒப்பந்தம்

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் தனது ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் சிகிச்சை வசதிக்காக வேலூா் நறுவீ மருத்துவமனையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வேலூா் நறுவீ மருத்துவமனை உயா்தர சிகிச்சை அளிப்... மேலும் பார்க்க