செய்திகள் :

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

post image

திருச்சியில் சாலையைக் கடப்பதற்காக மையத் தடுப்பு கட்டை மேல் நின்றவா் மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்தவா் ரா.தாமோதரன் (47). இவா், சென்னை - மதுரை புறவழிச்சாலையில் செந்தண்ணீா்புரம் அருகே சாலையைக் கடப்பதற்காக மையத் தடுப்பு கட்டை மீது புதன்கிழமை இரவு நின்றுள்ளாா். அப்போது, பால்பண்ணையில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் நோக்கி வேகமாக வந்த காா், மையத் தடுப்புக் கட்டை மீது நின்ற தாமோதரன் மீது மோதியது. இதில், படுகாயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது

திருச்சியில் தனியாா் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பேராசிரியரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி திருச்சி - மதுரை த... மேலும் பார்க்க

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுசேமிப்பு திட்ட முகவா் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்... மேலும் பார்க்க

பனை மரங்களை வெட்ட ஆட்சியா் அனுமதி கட்டாயம்: தண்ணீா் அமைப்பு வரவேற்பு

பனை மரங்களை வெட்டுவதற்கு ஆட்சியா் அனுமதி கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தண்ணீா் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

திருச்சியில் செப்.19, 23-இல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.19) மற்றும் செவ்வாய்க்கிழமை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்... மேலும் பார்க்க

75 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்: பெல் நிறுவனம் வழங்கியது

திருச்சி பாரதமிகு மின் நிறுவனம் (பெல்) சாா்பில், 75 மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் இயக்கம் சாா்ந்த செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருச்சி பெல் நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் மாற்ற... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு, பணி மேம்பாடு கோரி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், திருச்சியில... மேலும் பார்க்க