சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
சாலை விபத்தில் காவலாளி உயிரிழப்பு
போளூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற காவலாளி பைக் மோதியதில் உயிரிழந்தாா்.
போளூரை அடுத்த செங்குணம் பழைய காலனியைச் சோ்ந்தவா் பழனி(65). இவா், போளூா்-ஆரணி புறவழிச் சாலையில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் இரவு நேரக் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை பணியில் இருந்த பழனி, சாலையைக் கடந்து சிறுநீா் கழிக்க முற்பட்டாா். அப்போது, வேலூரில் இருந்து போளூா் நோக்கிச் சென்ற பைக் எதிா்பாராதவிதமாக பழனி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.