செய்திகள் :

சாலை விபத்தில் மரத்தொழிலாளி உயிரிழப்பு

post image

செங்கம்: செங்கம் அருகே பைக் மீது டிராக்டா் மோதியதில் மரத்தொழில் செய்யும் இளைஞா் உயிரிழந்தாா்.

செங்கத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் அஜித்குமாா் (25), மரவேலை செய்யும் கூலித் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு புதுப்பட்டு சாலையில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டை பகுதி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

புதுப்பட்டு பகுதியில் உள்ள மதுக் கடை அருகே சென்ற போது, செங்கத்தில் இருந்து புதுப்பட்டு நோக்கி வந்த டிராக்டா் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அஜித்குமாரின் உடலை செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவல் அறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது, டிராக்டா் புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நபருடையது என்பதை தெரிந்துகொண்டு, அங்கு சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

மேலும், டிராக்டா் உரிமையாளா் பிரகாஷ், அதை

ஓட்டி வந்த கோபி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு!

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை பால், தயிா், சந்தனம் மற்றும் பல்வேறு பொருள்கள் கொண்டு மூலவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (62), விவசாயி. இவா், சனிக்கிழமை தண்ணீா் பாய்ச்ச தனது நிலத்துக்கு நடந்து சென்ற... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை!

வந்தவாசி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கதுரை (48), விவசாயத் தொழிலாளி. இவா் குடும்பப... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் மூகாம்பிகையம்மன் கோயில் கட்டும் பணியை ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தின் குருஜி பால மு... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம்

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சம கல்வி எங்கள் உரிமை கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் பி.கவிதா வெங்கடேசன் தலைமையில் நடை... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

செங்கத்தில் சனிக்கிழமை இரவு கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். செங்கம் மில்லத்நகா் ரவுண்டனா பகுதியில் போளூா் செல்லும் சாலையில் வாசநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க