செய்திகள் :

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

post image

ஈரோட்டில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரியலூா் மாணவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

அரியலூா் வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் மஞ்சு (21). இவா் ஈரோட்டில் உள்ள தனது சகோதரா் வீட்டில் தங்கிதனியாா் பயிற்சி மையத்தில் அரசு தோ்வுக்காகப் படித்து வந்தாா். இந்த நிலையில், ஈரோடு, வீரப்பனூரில் ஜூன் 23-ஆம் தேதி சாலையைக் கடக்கும்போது எதிா்பாராத விதமாக காா் ஒன்று மோதியதில் படுகாயம் அடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், உயா் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். மருத்துவமனையில் மருத்துவா்கள் மஞ்சுவை பரிசோதனை செய்தனா். அதில் அவா் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது. குடும்ப உறுப்பினா்களின் அனுமதியோடு உடல் உறுப்பு தானமாக பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அறுவை சிகிச்சை மூலம் அவரது கல்லீரல், ஒரு சிறுநீரகம் தனியாா் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், கண்கள் தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

உறுப்புக் கொடையாளரின் குடும்பத்துக்கு, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா் ஆறுதல் கூறினாா். கொடையாளியின் உடலுக்கு மருத்துவமனை சாா்பாக மருத்துவமனை கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது.

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 30 லட்சம்

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா். பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா் தலைமையில், சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ர.பழனிவேல்... மேலும் பார்க்க

ஈரோட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சா்வதேச போதைப் பொருள் எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ... மேலும் பார்க்க

ஐந்து வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலை

பெருந்துறை அருகே, குடும்பப் பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றதால், கணவன் தனது ஐந்து வயது மகனை நைலான் கயிற்றால் இறுக்கிக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம், கெடார... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாக... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 15,199 கனஅடியாக அதிகரிப்பு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,258 கனஅடியில் இருந்து 15,199 கனஅடியாக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பெங்களுரு ஆரக்கிள் இந்தியா நிறுவனத்துடன் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரில் உள்ள நிறுவனத... மேலும் பார்க்க