செய்திகள் :

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி

post image

சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவரான வீர சாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், "இந்தியத் தாயின் உண்மையான மகன்" என்றும், வெல்ல முடியாத துணிச்சலின் சின்னம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் உலக அரங்கை எட்ட வேண்டும்: சுப்ரியா சுலே

அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கடுமையான துன்பங்களை எதிர்கொண்டபோதும் வீரர் வீர சாவர்க்கரின் அசைக்க முடியாத மனப்பான்மையும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

இந்தியத் தாயின் உண்மையான மகனான வீர் சாவர்க்கருக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலிகள். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்ட மிகக் கடுமையான பல கொடுமைகள் கூட தாய்நாட்டின் மீதான அவரது பக்தியை அசைக்க முடியவில்லை.

சுதந்திர இயக்கத்தில் அவரது அடங்காத துணிச்சல் மற்றும் போராட்டத்தின் வரலாறை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்காது.

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் அவரது தியாகமும், நாட்டிற்கான அர்ப்பணிப்பும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சென்னையில் ஒருநாள்கூட வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரு... மேலும் பார்க்க

ராமதாஸ் வழிகாட்டி; நான்தான் தலைவர்: அன்புமணி

ராமதாஸ் பாமகவின் வழிகாட்டி, நான்தான் கட்சியின் தலைவர் என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இ... மேலும் பார்க்க

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு!

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக உத்தங்குடியில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது.ஜல்லிக்கட்டினை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலர் ... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் வகையில் 500 என்சிசி மாணவர்கள் யோகா!

ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்வை கௌரவிக்கும் வகையில் கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மதுக் கடைகளுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்வு!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைஉரிமத்திற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு கடந்த மே 28 ஆம் தேதி அமலுக்கு வந்தது. பீருக்க... மேலும் பார்க்க