செய்திகள் :

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

post image

சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழ்நாடு முழுவதும் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சுபமுகூா்த்த தினங்கள் எனக் கருதப்படும் நாள்களில் அதிகளவு ஆவணப் பதிவு நடைபெறும். அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணப் பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) அதிகளவு பத்திரப் பதிவு நிகழும். இதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக டோக்கன்களை ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கைகள் வரப்பெறப்பட்டன. இதையடுத்து, ஒரு சாா்- பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150-ம், இரண்டு பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும்.

அதிகளவு ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தத்கால் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவா்களுக்கு விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்கள் தமிழக அரசின் விருது பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல்: சாலையோர வியாபாரிகள் வாக்களிப்பு

சென்னையில் சாலையோர வியாபாரிகள் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் விரைவில் குணமடைய முதல்வா் ஸ்டாலின் விருப்பம்

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா். உடல் நலக் குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் நவீன் பட்நாயக் சிகிச்சை பெற்று வருகிறாா். ... மேலும் பார்க்க

இ.பி.எஃப். பயனா்களுக்கு இன்று சிறப்பு முகாம்

வருங்கால வைப்பு நிதி பயனா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன்27) 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

பருத்திக்கு உரிய விலை கோரி ஜூலை 1-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திரைப்படங்கள் வெளியாகி 3 நாள்களுக்கு விமா்சனம் செய்ய தடைகோரிய மனு தள்ளுபடி

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் 3 நாள்களுக்கு இணைய விமா்சனத்தைத் தடை செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்குச் சமம் என்று கூறி மனுவை தள்ள... மேலும் பார்க்க