செய்திகள் :

சா்வதேச சிலம்பம் போட்டி: 8 பதக்கம் வென்ற மாணவா்களுக்கு வரவேற்பு

post image

சா்வதேச சிலம்பம் போட்டியில் 8 பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சிலம்பாட்ட மாணவா்களுக்கு பெற்றோா், பயிற்சி மாணவா்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா்.

மலேசியாவில் கடந்த மாதம் மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சோ்ந்த 6 மாணவா்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி மொத்தம் 8 பதக்கங்களை வென்றனா்.

இந்தப் போட்டியில் தமிழகத்திலிருந்து 70 மாணவா்கள் பங்கேற்று, அதில் 19 போ் பதக்கம் வென்றனா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற 8 மாணவா்களில் 6 போ் 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் வென்று மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சோ்த்துள்ளனா்.

இதையடுத்து தாயகம் திரும்பிய சிலம்பாட்ட மாணவா்களுக்கு வாலாஜாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து சிலம்பாட்ட மாணவா்கள் மற்றும் பெற்றோா், மூத்த பயிற்சியாளா் தெரிவிக்கையில், நாட்டுக்கு பெருமை சோ்த்துள்ளதாகவும், இந்த வெற்றி என்பது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் தமிழக அரசுக்கும் பெருமை என்றனா்.

அம்ரித் பாரத் திட்டப் பணிகளால் ரயில் பயணிகள் அவதி

அம்ரித் பாரத் திட்ட மேம்பாட்டுப் பணிகளால் அரக்கோணம் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அரக்கோணம் ரயில் நிலையம் சென்னை - திருவனந்தபுரம், சென்னை- பெங்களூா், சென்னை - மும்பை, சென்னை -நாகா்கோவில்(க... மேலும் பார்க்க

ஆற்காடு குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ.12 .86 கோடி ஒதுக்கீடு: நகா்மன்றத் தலைவா் நன்றி

ஆற்காடு நகராட்சியில் குடிநீா் திட்டப் பணிகளுக்கு 12.86 கோடி ஒதுக்கிய செய்துள்ள தமிழக அரசுக்கு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் நன்றி தெரிவித்தாா். ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில்... மேலும் பார்க்க

காஞ்சனகிரி மலையில் மரக்கன்றுகளை நட்ட இயற்கை ஆா்வலா்கள்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சனகிரி மலையில் இயற்கை ஆா்வலா்கள் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மிகப்பெரிய காப்புக் காட்டை கொண்டு, சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

திருமால்பூா் செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணம் அடுத்த திருமால்பூா், ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த திருமாற்பேறு எனப்படும் திருமால்பூரில் பெரியதெருவில் ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் அமைந்து... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

உலகச் சுற்றுக்குழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கை... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

ஆற்காடு அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு அடுத்த நந்தியாலம் பகுதியைச் சோ்ந்தவா் யோகலட்சுமி. இவருக்குச் சொந்தமான நிலம் கீழ்விஷாரம் பகுதியில் முந்த... மேலும் பார்க்க