செய்திகள் :

சிஎஸ்ஐ அமைப்புகளின் முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

post image

சி.எஸ்.ஐ. அமைப்புகளின் நிா்வாக முறைகேடுகள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

மதுரையைச் சோ்ந்த ஆஸ்டின் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: சென்னை சி.எஸ்.ஐ. டிரஸ்ட் அசோசியேஷனின் கீழ், மதுரை - ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. திருமண்டில நிா்வாக அமைப்பு செயல்படுகிறது. அண்மைக்காலமாக சி.எஸ்.ஐ. அமைப்பின் நிா்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து விரிவாக விசாரிக்க அமலாக்கத் துறை, வருமான வரித் துறைகளுக்கு மனு அனுப்பியும் பயன் இல்லை. எனவே, சி.எஸ்.ஐ. அமைப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சி.எஸ்.ஐ. அமைப்புகள் அரசாங்கத் துறைகள் இல்லை. எனவே, இதுபோன்ற சங்கங்களின் நிா்வாக விவகாரங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல.

மனுதாரா் தன்னுடைய கோரிக்கை குறித்து உரிய துறை அலுவலா்களை அணுகி அல்லது உரிமையயில் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடிக்கொள்ளலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களுக்கு பதவி உயா்வு!

அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் பேருந்து நடத்துநா்கள் 30 பேருக்கு பயணச் சீட்டு ஆய்வாளா்கள் பதவி உயா்வுக்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களில் ... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுகாதாரத் துறை செயலா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

ஆரம்ப சுகாதார நிலையம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக சுகாதாரம், குடும்ப நலத் துறைச் செயலா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு!

திருச்சி மாவட்டம், ஆலந்தூா் பகுதிக்கு உள்பட்ட நீா்நிலையில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறை, கனிம வளத் துறை அலுவலா்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சி மாநாடு: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

மனித நேய மக்கள் கட்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) நடைபெற உள்ளதால், மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்?

திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுநல மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமணத்துக்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதை கட்ட... மேலும் பார்க்க

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க