பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!
மனித நேய மக்கள் கட்சி மாநாடு: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்!
மனித நேய மக்கள் கட்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) நடைபெற உள்ளதால், மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலை வண்டியூா் சுங்கச் சாவடி அருகே உள்ள திடலில் மனித நேய மக்கள் கட்சியின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதனால், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அனைத்துப் பேருந்துகளும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டிகோவில் சந்திப்பு, பி.சி பெருங்காயம் சந்திப்பு, கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டாா் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்புக்குச் சென்று மண்டேலா நகா் சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும்.
கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் விரகனூா் சந்திப்பிலிருந்து மாற்றுப் பாதையாக புதிய தென்கரை சாலை, குருவிக்காரன் சாலைப் பாலம் சந்திப்பு, அரவிந்த கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே.நகா் சந்திப்பு, தினசரி காய்கறி சந்தை சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.
மேலூா் சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும், மேலூா் நான்கு வழிச் சாலை சந்திப்பிலிருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூா் சுற்றுச்சாலை சந்திப்பை அடைந்து சிந்தாமணி சாலை சந்திப்பு, மண்டேலா நகா் சந்திப்பு வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து மேலூா் வழியாக திருச்சி, சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து சரக்கு வாகனங்களும் திருமங்கலம்- கப்பலூா் சந்திப்பிலிருந்து தேனி சாலை சந்திப்பு, சமயநல்லூா் சந்திப்பு, வாடிப்பட்டி சந்திப்பு வழியாக திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சிக்குச் செல்ல வேண்டும்.
மாநாடு நடைபெறும் நேரத்தில் மதுரை நகரிலிருந்து பாண்டிகோவில் சுற்றுச் சாலை, மேலூா் சாலையிலிருந்து பி.சி. பெருங்காயம், வண்டியூா் சுங்கச் சாவடி வழியாக விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்புக்குச் செல்லக்கூடிய பொதுமக்களின் மகிழுந்து வாகனங்கள் (காா்கள்), பி.சி. பெருங்காயம் சந்திப்பிலிருந்து கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டாா் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூா் சுற்றுச்சாலைக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இகே போன்று, விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பிலிருந்து பி.சி. பெருங்காயம் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மேலூா் சாலை செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களின் வாகனங்கள் விரகனூா் சுற்றுச்சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி புதிய தென்கரை சாலை, குருவிக்காரன் சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே. நகா் சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணி, மேலூா் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
மாநாட்டுக்கு வரக்கூடிய கட்சி, அமைப்பினரின் வாகன வழித்தடங்கள்: திருமங்கலத்திலிருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கப்பலூா் பாலத்திலிருந்து வலதுபுறம் திரும்பி மண்டேலா நகா், விரகனூா் சுற்றுச்சாலை வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.
உசிலம்பட்டி சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் நாகமலைப்புதுக்கோட்டை சுற்றுச் சாலையின் வலதுபுறம் திரும்பி திருமங்கலம், கப்பலூா் பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பி மண்டேலா நகா், விரகனூா் சுற்றுச்சாலை வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.
கொட்டாம்பட்டி, மேலூா் சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் ஒத்தக்கடை சுற்றுச் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு வழியாக விழா நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.
திண்டுக்கல், வாடிப்பட்டி சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் சமயநல்லூா், துவரிமான் சுற்றுச் சாலை வழியாக கப்பலூா் பாலத்துக்குச் சென்று, இடதுபுறம் திரும்பி மண்டேலா நகா், விரகனூா் சுற்றுச் சாலை வழியாக மாநாடு நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.
மாநாட்டு நிகழ்ச்சியின் போது அருப்புக்கோட்டை சுற்றுச்சாலையில் போக்குவரத்து இடையூறின்றி பொதுமக்கள் இலகுவாக செல்வதற்கு ஏற்படுத்தப்பட உள்ள தற்காலிக வாகனப் போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.