செய்திகள் :

சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!

post image

சிக்கிம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த, 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேர், இந்திய விமானப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிக்கிமில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் உள்பட பல்வேறு கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

இந்நிலையில், அப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகிய படைகள் ஈடுபட்டுள்ளன.

இந்த மீட்புப் பணிகள் குறித்து, இந்திய விமானப் படையின் எக்ஸ் தளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

“இந்திய விமானப் படையின் எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்கள் மூலம், சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கியதுடன், தேசிய மீட்புப் படை வீரர்களை அப்பகுதியில் தரையிறக்கி, சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்டுள்ளோம். உயிர்களைக் காப்பாற்றுவதில், இந்திய விமானப் படை தொடர்ந்து உறுதியாகவுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

சிக்கிமில் நிலவும் மோசமான வானிலைக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சிக்கியுள்ள உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான உதவிகளை இந்திய ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட லாச்சென் கிராமத்தில் சிக்கியுள்ள 113 சுற்றுலாப் பயணிகளை மீட்க, ராணுவ வீரர்கள் புதிய பாதை ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2 நாள்களுக்கு முன்பு லாசங் மற்றும் சங்தாங் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 1,678 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நியமனங்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும்: பி.ஆர். கவாய்

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்! அமெரிக்கா உறுதி

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைத் தெரிவிக்க அமெரிக்காவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு சென்றுள்ளது. அமெரிக்காவின் நாடாளுமன்ற குழுவிடம் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தபின், ... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்! செய்திகள் - நேரலை!!

தங்கம் விலை குறைந்தது!! சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1200 குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க..கிருஷ்ணகிரியில் பக்ரீத் திருநாள் கிருஷ்ணகிரியில் ப... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 6,000-ஐ நெருங்குகிறது!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 391 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை ஆக உள்ளது.மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் எ... மேலும் பார்க்க

டெய்லர் முதல் யூடியூபர் வரை.. உளவாளிகளுக்கான உக்திகளை மாற்றியிருக்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டுக்குள் இருந்துகொண்டு, பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பஞ்சாப் ... மேலும் பார்க்க

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க