செய்திகள் :

சிக்கிம் நிலச்சரிவு: 5வது நாளில் 44 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

post image

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கித் தவித்த 44 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தின் சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று இரவு பெய்த கனமழையால் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து 5வது நாளாக இன்று (ஜூன் 6) நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, அங்கு சிக்கிய மக்களையும், மாயமான ராணுவ வீரர்களையும் மீட்கும் பணியில் இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகிய படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் மூலம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (ஜூன் 5) மட்டும் ஹெலிகாப்டர்கள் மூலம் 63 பேர் மீட்கப்பட்டனர்.

ஆனால், அங்கு நிலவிய மோசமான வானிலையால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதையடுத்து, இன்று (ஜூன் 6) காலை முதல் சட்டெனில் சிக்கியிருந்த 44 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டதாகவும், இதன்மூலம் அங்கு சிக்கியிருந்த அனைவரும் வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்ட அனைவரும் பாக்யோங் பகுதியிலுள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து பேருந்துகள் மூலம் கேங்டோக் நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக, கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவால், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது. இதில், 3 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும், 6 பேர் மாயாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க

உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கு !

உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர், அலிகாரில் இருந்து தன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த இரண்டு என்கவுன்டர்களில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சமீபத்திய உயிரிழப்புகளுடன், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களான சுதாகர், பாஸ்கர் உட்... மேலும் பார்க்க

தொழிலாளர்களின் வேலைநேரத்தை உயர்த்திய ஆந்திர அரசு! தொழிற்சங்கங்கள் போராட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 9-லிருந்து 10 மணிநேரமாக அம்மாநில அரசு உயர்த்தியதற்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஆந்திரப் பிரதேசத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க, முதல்வர... மேலும் பார்க்க