செய்திகள் :

சிங்கப்பூா்: சக ஊழியரின் காதைக் கடித்த இந்திய இளைஞருக்கு 6 மாத சிறை

post image

சிங்கப்பூரில் தன்னுடன் பணியாற்றி வரும் சக இந்திய ஊழியரின் காதைக் கடித்த குற்றத்துக்காக 21 வயது இந்திய இளைஞா் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தனியாா் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றும் செந்தில் குமாா் விஷ்ணுசக்தி (21) சக ஊழியரான நேசமணி ஹரிஹரனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் கைகலப்பாக மாறிய நிலையில் அவரது காதைக் கடித்துள்ளாா்.

கடந்த பிப்.15-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பணியாளா்கள் தங்குமிடத்துக்கு வந்த செந்தில்குமாா் தன்னுடைய செயல்பாடுகளைத் தொடா்ந்து கண்காணித்து நிறுவன மேலாளரிடம் நேசமணி தெரிவித்ததாக கூறி எச்சரித்துள்ளாா். இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது.

அப்போது நேசமணியின் இடது காதை செந்தில்குமாா் விஷ்ணுசக்தி விடாமல் கடித்ததில் காதுமடல் அறுந்தது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோதும் காதுமடலில் ஏற்பட்ட பாதிப்பை முழுவதுமாக குணப்படுத்த முடியவில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக சிங்கப்பூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது செந்தில்குமாருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எப்போதும் அச்சுறுத்தல்! ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி

அனைத்து காலகட்டத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓகா தெரிவித்துள்ளார்.கோவா உயர்நீதிமன்ற பார் கவுன்சில் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முறியடிப்பு!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவையில் தலைமை நீதிபதி கவாய்க்கு பாராட்டு விழா!

மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் 52 -ஆவது தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந... மேலும் பார்க்க

போலியான பார்சல், செல்ஃபி, முகத்தில் ஸ்பிரே! புனே சம்பவம் சொல்வது என்ன?

புனேவில், டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.டெலிவரி ஏஜெண்ட் போல, ஒரு போலியான பார்சலுடன், புனேவில் உள்ள அ... மேலும் பார்க்க

விமான விபத்து இழப்பீடு பெற கடுமையான விதிகள்: ஏர் இந்தியா மீது குற்றச்சாட்டு

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இழப்பீடு பெற ஏர் இந்தியா கடுமையான விதிகளை புகுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. முன்னால் அமைச்சர் யோகேந்திர சாவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடந்துவரும் சட்டவிரோத மணல் சுங்கம் மற்ற... மேலும் பார்க்க