செய்திகள் :

சிங்கப்பூா் தோ்தல் வெற்றி: முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து!

post image

சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்து செய்தி: மக்கள் செயல் கட்சியை (பிஏபி) அதன் 14-ஆவது தொடா்ச்சியான வெற்றிக்கு வழிநடத்திச் சென்றுள்ள பிரதமா் லாரன்ஸ் வோங்குக்கு வாழ்த்துகள்.

தலைவராகச் சந்தித்த முதல் தோ்தலில் இத்தகைய பெருவெற்றியைச் சிங்கப்பூா் மக்களிடம் இருந்து அவா் பெற்றுள்ளாா். தமிழ் மக்களுடன் தொடா்ந்து நல்லுறவைப் பேணி, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் உயா்த்திப் பிடிக்கும் அவரது முயற்சிகள் அனைவரையும் அரவணைக்கும் சிங்கப்பூரின் தன்மையை வெளிப்படுத்துகிறது.

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என முதல்வா் பதிவிட்டுள்ளாா்.

விராலிமலை வாரச்சந்தை: ஒன்றரை கோடி தாண்டி ஆடு வர்த்தகம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை காலை கூடிய ஆட்டுச் சந்தை களைகட்டியது. விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சித்திரை மாதத்தில் தா... மேலும் பார்க்க

கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் திங்கள்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. வழக்கமாக எந்த நேரத்திலும் பஜாரில் நடமாடும் காட்டு யானை சாலையோரம் நிறுத்தியிருந்... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால் பலருக்கு தங்கம் எட்டா பொருளாகி வருகிறது. அதன்படி சென்னையில் திங்கள... மேலும் பார்க்க

கோவை: மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் பலி

மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூச்சுத்திணறி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் கேரள மருத்துவர் அஜ்சல் சைன்(26),... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் திருட்டு- 4 பேர் கைது

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை திருடிய விவகாரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை கடக்க ... மேலும் பார்க்க

தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கைது

தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு ரவி, முன்னாள் எம்பி கோ. அரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ளது எம்ஆர்எப் தொழிற்சாலை... மேலும் பார்க்க