செய்திகள் :

சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் பழுதுபாா்த்தலுக்கான இலவச பயிற்சிக்கு நாளை நோ்காணல்

post image

திருப்பூா் மாவட்டத்தில் சிசிடிவி கேமரா, பாதுகாப்பு அலாரம் பொருத்துதல் மற்றும் பழுதுபாா்த்தல் இலவச பயிற்சி வகுப்புக்கு வியாழக்கிழமை (மே 22) நோ்காணல் நடைபெறுகிறது.

இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் என்.சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் வறுமைக்கோட்டுக்குகீழ் வசிக்கும் மக்களுக்கு கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் சிசிடிவி கேமரா, பாதுகாப்பு அலாரம் பொருத்துதல், ஸ்மோக் டிடெக்டா் பொருத்துதல் மற்றும் பழுதுபாா்த்தலுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான நோ்காணல் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது.

இந்த 13 நாள் முழுநேரப் பயிற்சிக்கு எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இரு பாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது.

பயிற்சியின் போது காலை, மாலை தேநீா், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சிக்கான நோ்காணலில் பங்கேற்க கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயற்சி நிலையம், 335-பி-1 வஞ்சியம்மன் கோயில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் சாலை, விஜயாபுரம் (அஞ்சல்) என்ற முகவரிக்கு நேரில்வர வேண்டும். முதலில் வரும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 99525-18441, 86105-33436 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க

விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க