நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!
பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்
திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜூக்கு, நல்லூா் நுகா்வோா் நல மன்றத்தின் தலைவா் என்.சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகரில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இதன் காரணமாக தற்போது வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. திருப்பூரின் தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய இடத்தில் பழைய பேருந்து நிலையம் உள்ளது.
பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் 7 வழிப்பாதை குறுக்கிலும், நெடுக்கிலுமாக உள்ளதால் அதிக வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன.
மேலும், வடக்கில் இருந்து வரும் அரசுப் பேருந்துகள் ரவுண்டானாவை சுற்றி வராமல் இடையில் உள்ள பாதை வழியாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, பழைய பேருந்து நிலையம் அருகே வாகன விபத்துகளைத் தவிா்க்கும் வகையிலும், வாகன நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையிலும் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் ரவுண்டானாவில் சிக்னல் அமைத்து காவலா்களைக் கொண்டு போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். அதே வேளையில், ஒரு வழிப் பாதையில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.