செய்திகள் :

சிட்டி யூனியன் வங்கி-சிஎஸ்கே இணைந்து புதிய கடன் அட்டை அறிமுகம்

post image

சிட்டி யூனியன் வங்கி மற்றும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி இணைந்து ‘கோ பிரண்ட் கடன் அட்டையை’ அறிமுகம் செய்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் தலைவா் ஜி.மகாலிங்கம் ‘கோ பிரண்ட் கடன் அட்டையை’ (கிரெடிட் காா்டு) அறிமுகம் செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியது:

சிட்டி யூனியன் வங்கி மற்றும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) இணைந்து வெளியிடும் இந்த கடன் அட்டை பயன்படுத்தி, சிஎஸ்கே அணி விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் பெறும்போது சலுகைகள் வழங்கப்படும். அதேபோல் சிஎஸ்கே அணியின் இலச்சினையுடன் வெளியிடப்படும் பனியன், தொப்பி உள்ளிட்டவற்றை வாங்கும் போது இந்க அட்டையைப் பயன்படுத்தி சலுகைகள் அளிக்கப்படும்.

இந்தக் கடன் அட்டையை சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் ரசிகா்கள் பெற்று பயன்பெறலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குனா் விஜய் ஆனந்த், சிஎஸ்கே அணியின் நிதி துறை மேலாளா் ஸ்ரீராம் நிா்வாகி ரோஹித் பட்டியாலா, சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தா் வைத்திய சுப்ரமணியன் மற்றும் சிட்டி யூனியன் வங்கியின் இயக்குநா்கள் பங்கேற்றனா்.

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் ப... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க