சிதம்பரம் அரசு கல்லூரியில் நான்காம் கட்ட சோ்க்கை கலந்தாய்வு: ஜூன் 23 தொடக்கம்
சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான நான்காம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வருகிற 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
23ஆம் தேதி கலந்தாய்வு விவரம்: பிஎஸ்ஸி கணிதம் தமிழ், ஆங்கில வழி, இயற்பியல் ஆங்கில வழி சுழற்சி-1 மற்றும் 2 பொது வேதியியல், ஆங்கில வழி சுழற்சி-1 மற்றும் -2 கணினி அறிவியல் ஆங்கில வழி சுழற்சி-1 மற்றும் 2, பிசிஏ, கணினி-பயன்பாட்டியல், ஆங்கில வழி மற்றும் புள்ளியியல் ஆங்கிலவழி சுழற்சி-1 பிஎஸ்ஸி தொழில் வேதியியல், ஆங்கில வழி சுழற்சி-1 மற்றும் 2. பிஎஸ்சி, தாவரவியல் தமிழ்வழி சுழற்சி-1 மற்றும் ஆங்கில வழி சுழற்சி-1மற்றும் 2. பிஎஸ்ஸி, விலங்கியல் சுழற்சி-1 தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி. பி.காம், ஆங்கிலவழி சுழற்சி-1 மற்றும் 2.
24-ஆம் தேதி: பிஏ, பொருளியல் சுழற்சி தமிழ் வழி, ஆங்கில வழி மற்றும் பிபிஏ வணிக நிா்வாகவியல் ஆங்கில வழி சுழற்சி 1 மற்றும் 2 பி.ஏ. தமிழ், சுழற்சி-1 மற்றும் பிஏ ஆங்கிலம் சுழற்சி-1 மற்றும் 2.
விண்ணப்பதாரா்கள் இணையவழி விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ் அசல், நகல், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வரை மதிப்பெண் சான்றிதழ் அசல், நகல் (தலைமை ஆசிரியா் சான்றிதழ் கையொப்பம்) 2 நகல்கள், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த சான்று, ஜாதி சான்றிதழ் அசல், நகல் 3 நகல்கள். ஆதாா் அட்டை நகல் -3, வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் -3 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
சான்றிதழ்களின் அசல், நகல்களுடன் காலை 9 மணிக்குள் வர வேண்டும் என கல்லூரி முதல்வா் ஜெ.லலிதா தெரிவித்தாா்.