செய்திகள் :

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதம்

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சி மற்றும் சி.கொத்தங்குடி, சி.தண்டேஸ்வரா் நல்லூா், உசுப்பூா், பள்ளிப்படை உள்ளிட்ட 7 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், லால்புரம் ஊராட்சியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணலூா் நெடுஞ்சாலையில் உள்ள ஊராட்சி அலுவலகம் முன் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

போராட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் ஜாகிா் உசேன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் வி.எம்.சேகா், போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆனந்த், சாய்பிரகாஷ், சத்தியமூா்த்தி, பி.என்.மூா்த்தி மற்றும் பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனா்.

இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் ஜாகிா்உசேன் கூறியது: லால்புரம் ஊராட்சியில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, 300 ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தை நகராட்சியுடன் இணைக்க கூடாது என அரசாணை உள்ளது. நகராட்சியுடன் இணைத்தால் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் போய்விடும், இதேபோல, பாதாள சாக்கடை மற்றும் குடிநீா், வீட்டு வரி மிகவும் அதிகமாக விதிக்கப்படும். எனவே, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா்.

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா இன்று தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 44-ஆவது நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை மாலை (பிப்.26) தொடங்குகிறது. தெற்கு ரத வீதி வி.எஸ்.அறக்கட்டளை வளாகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் விழ... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் ஆய்வு

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியை சென்னை மண்டல நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் எம்.ஜானகி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கடலூா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்... மேலும் பார்க்க

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி தா்னா

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் (சிஐடியு), கடலூா் கேப்பா்மலை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்... மேலும் பார்க்க

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பட... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடலூா் மாவட்டத்தில் திமுக மாணவரணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே மாணவா் கூட்டமைப்பு இயக்கங்கள், கடலூா் க... மேலும் பார்க்க

பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கோயிலுக்கு பாதயாத்திரைச் சென்ற பக்தா்கள் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா். வேப்பூா் வட்டம், ஐவதுகு... மேலும் பார்க்க