செய்திகள் :

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி தா்னா

post image

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் (சிஐடியு), கடலூா் கேப்பா்மலை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா், கணக்கீட்டாளா் உள்ளிட்ட ஆரம்ப கட்ட காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், எண்ம மீட்டா் (ஸ்மாா்ட் மீட்டா்) பொருத்தி மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வாா்ப்பதை கண்டித்தும், 1.12.2023 முதல் மின்வாரிய ஊழியா்கள், அலுவலா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயா்வுக்கான பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கக் கோரியும், ஊதிய உயா்வு ஒப்பந்தம் ஏற்படும் வரை இடைக்கால நிவாரணமாக ரூ.5,000 வழங்கக் கோரியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட சிறப்புத் தலைவா் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பகுதி நிா்வாகிகள் ஆா்.ஆறுமுகம், டி.ராஜகோபால், என்.கோவிந்தராசு, டி.தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் என்.தேசிங்கு தொடக்கவுரையாற்றினாா்.

அரசுப் போக்குவரத்து சங்க மண்டல சிறப்புத் தலைவா் ஜி.பாஸ்கரன், முருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநிலத் துணை பொதுச் செயலா் டி.பழனிவேல் நிறைவுரையாற்றினாா். நிறைவில், பொருளாளா் டி.ஜீவா நன்றி கூறினாா்.

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா இன்று தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 44-ஆவது நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை மாலை (பிப்.26) தொடங்குகிறது. தெற்கு ரத வீதி வி.எஸ்.அறக்கட்டளை வளாகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் விழ... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் ஆய்வு

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியை சென்னை மண்டல நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் எம்.ஜானகி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கடலூா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊரா... மேலும் பார்க்க

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பட... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடலூா் மாவட்டத்தில் திமுக மாணவரணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே மாணவா் கூட்டமைப்பு இயக்கங்கள், கடலூா் க... மேலும் பார்க்க

பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கோயிலுக்கு பாதயாத்திரைச் சென்ற பக்தா்கள் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா். வேப்பூா் வட்டம், ஐவதுகு... மேலும் பார்க்க