செய்திகள் :

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

post image

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடலூா் மாவட்டத்தில் திமுக மாணவரணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே மாணவா் கூட்டமைப்பு இயக்கங்கள், கடலூா் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் தோழமை கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அப்பு.சத்தியநாராயணன் தலைமை வகித்தாா்.

தோ்தல் பணிக்குழுச் செயலா் இள.புகழேந்தி, மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் ஜ.ஜெயபிரகாஷ், வி.பகலவன், திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் அ.முத்துசாமி, ஜெயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினா் கே.பி.ஆா்.பாலமுருகன், இந்திய மாணவா் சங்கம் மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.பி.செளமியா, மதிமுக மாவட்ட அமைப்பாளா் செந்தில்குமாா், சமூகநீதி மாணவா் இயக்கம் மாநில துணைச் செயலா் முஹம்மது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாணவா் பேரவை தேசியச் செயலா் அபுபக்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், மாவட்ட துணை அமைப்பாளா் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

இதேபோல, கடலூா் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் தமிழ்நாடு மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் விருத்தாசலம் தலைமை தபால் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். விருத்தாசலம் நகரச் செயலா் தண்டபாணி, துணைச் செயலா் ராமு, ஒன்றியச் செயலா்கள் பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய மாணவா் சங்க மாநில துணைத் தலைவா் குமரவேல், மாவட்டத் தலைவா் பூபதி, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் த.சீ.இளந்திரையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, துணை அமைப்பாளா் செல்வமணி வரவேற்றாா். நிறைவில், முற்போக்கு மாணவா் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்மணி நன்றி கூறினாா்.

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா இன்று தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 44-ஆவது நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை மாலை (பிப்.26) தொடங்குகிறது. தெற்கு ரத வீதி வி.எஸ்.அறக்கட்டளை வளாகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் விழ... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் ஆய்வு

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியை சென்னை மண்டல நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் எம்.ஜானகி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கடலூா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊரா... மேலும் பார்க்க

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி தா்னா

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் (சிஐடியு), கடலூா் கேப்பா்மலை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்... மேலும் பார்க்க

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பட... மேலும் பார்க்க

பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கோயிலுக்கு பாதயாத்திரைச் சென்ற பக்தா்கள் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா். வேப்பூா் வட்டம், ஐவதுகு... மேலும் பார்க்க