செய்திகள் :

பெண்கள் தலை வழுக்கையாக கோதுமை காரணமா?

post image

மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராம மக்களுக்கு திடீரென முழுவதுமாக தலைமுடி உதிர்ந்து வழுக்கையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு சமீபமாக திடீரென முடி உதிர்தல், தலைவலி, காய்ச்சல், தலையில் அரிப்பு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. பெண்கள் உள்பட பெரும்பாலானோருக்கு தலைமுடி உதிர்ந்து வழுக்கையாக மாறியுள்ளது. இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்களின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவற்றில் செலினியம் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமைதான் காரணம் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க | இந்தியர்கள் தங்கள் ஊதியத்தில் செலுத்தும் இ.எம்.ஐ. எவ்வளவு தெரியுமா?

பரிசோதனையில், கோதுமையில் செலினியம் அளவு 600 மடங்கு அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் தெரிவித்தார்.

மேலும், "ரத்தம், சிறுநீர் மற்றும் தலைமுடி மாதிரி ஆகியவைகளில் முறையே 35,60,150 மடங்கு செலினியம் அளவு அதிகமாக உள்ளதும் அதேநேரத்தில் இந்த மாதிரிகளில் ஜிங்க் அளவு குறைவாக இருந்ததும் தெரியவந்துள்ளது. செலினியம் அதிகரிப்பால்தான் மக்களுக்கு தலைமுடி உதிர்தல் ஏற்பட்டுள்ளது"என்றார்.

அந்த கோதுமையை பயன்படுத்துவதை நிறுத்தியபின்பு அவர்களுக்கு தலைமுடி வளரத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் மக்களின் தலைமுடி உதிர்வுக்கு கோதுமையில் செலினியம் அளவு அதிகமாக இருந்ததுதான் காரணம் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்திய உணவுக் கழகத்துக்கு பஞ்சாப்தான் அதிக கோதுமையை வழங்குகிறது என்றும் வேறு வந்த மாநிலமும் இதுபோன்றதொன்று புகாரைத் தெரிவிக்கவில்லை என்றும் மத்திய உணவுத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த பருவ காலத்தில், பஞ்சாபிலிருந்து 128 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இது மத்திய அரசின் மொத்த கொள்முதலில் 47% ஆகும். அடுத்து ஹரியாணா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளதாகவும் உணவுத் துறை கூறியது.

மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறுகையில், கோதுமையில் மட்டும் செலினியம் இல்லை, வேறு பல உணவுகளிலும் செலினியம் உள்ளது.

ஐசிஎம்ஆர் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசின் நிறுவனங்கள் நிலைமையைக் கண்காணித்து வருவதுடன் காரணத்தைக் கண்டறியவும் முயற்சித்து வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கிராமங்களில் உள்ள பல்வேறு உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துள்ளது.

கோதுமையின் சில மாதிரிகளில் அதிக அளவு செலினியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இருப்பினும், இந்தப் பகுதியில் திடீரென வழுக்கை ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்று கூறுவது சரியாகாது. வேறு உணவுகளும் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.

எனினும் புல்தானா மாவட்ட கிராம மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | பொரித்த உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா? எண்ணெய் பற்றிய கவனம் தேவை!

வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிபவரா?

நாடு முழுவதும், சாலை விபத்துகளின்போது மூளையில் காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்று வேலூரில் இயங்கி வரும் சிஎம்சி மருத்துவமனை நடத்திய ஆய்வில்... மேலும் பார்க்க

விரைவில் குத்தம்பாக்கம் பேருந்து முனையம்! மூடப்படுகிறதா பூவிருந்தமல்லி பேருந்து நிலையம்?

சென்னையில் ஊரகப் பகுதிகளுடனான இணைப்பை மேம்படுத்த பூந்தமல்லி பேருந்து மையம் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையின் உள்பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசலைத் தவிா்க்கவ... மேலும் பார்க்க

தமிழகம் கொண்டாடும் சோசலிச பிதாமகன் ஆச்சார்ய நரேந்திர தேவ்!

ஒழுக்கத்தின் சிகரம். அந்தக் காலத்து தேசியத் தலைவர்களில் மிகவும் உன்னதமான இடம் வகித்த இந்தியாவின் தலைசிறந்த தலைவர் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணால் பாராட்டப்பட்டவர்...உணரச்சி, பண்பு, அறிவு, மனித முதிர்ச்சி... மேலும் பார்க்க

வாக்காளர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வது எப்படி? தரவுகளும் சந்தேகமும்!

மக்களவைத் தேர்தலுக்கும் சில மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களுக்கும் இடைப்பட்ட சில மாதங்களில் லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கேள்வி எழ... மேலும் பார்க்க

டேட்டா திட்டத்துக்கு ஆப்பு! மக்களை ஏமாற்றுகிறதா ஜியோ, ஏர்டெல்?

மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்த டேட்டா திட்டங்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன.டேட்டா திட்டங்களுக்கான விலையை மாற்றாமல் நாள்களைக் குறைத்திருப்பதால் பலரும்... மேலும் பார்க்க

நிறைவேறுமா டிரம்ப்பின் காஸா கனவுத் திட்டம்?

‘காஸா முனையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பாலஸ்தீனா்களையெல்லாம் ஜோா்டான், எகிப்து போன்ற நாடுகளுக்கு வெளியேற்றிவிட்டு, அந்தப் பகுதியை மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தின் ரிவியேர... மேலும் பார்க்க