சிதானந்தஜி: விரும்பியவாறே உங்கள் வாழ்க்கை அமைய எளிய ரகசியம்; கலந்து கொள்ளுங்கள் அனுமதி இலவசம்
9-ம் தேதி (9-2-2025) அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் (திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு பின்புறம்) எப்படி வாழ்வது? என்ற தலைப்பில் ஆன்மிக சிறப்புரை ஆற்றவுள்ளார் சிதானந்தஜி.
பகுத்தறிவுடன் கூடிய சிந்தனைதான் மனிதனை மிருகங்களைவிட மேம்பட்டவனாய் ஆக்குகிறது. மேலும் பொறுமை; தியாகம்; தலைமை போன்ற நல்ல குணங்கள் எல்லாம் சேர்ந்து மனிதனை தெய்வ நிலைக்கும் அழைத்துச் சென்றது. ஒரு நல்ல குருவைப் பெற்றவர் ஞானியாகும் நிலை இந்தியாவில் மட்டுமே சாத்தியமாக இருந்தது. அந்நிலையில் சென்ற நூற்றாண்டின் தன்னிகரில்லா மெய்ஞ்ஞான குருவாக விளங்கியவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். அவரின் பிரதிநிதியாக விளங்குபவர் சுவாமி சிதானந்தஜி.
ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்தஜி தனது குருவின் போதனைகளை உலகெங்கும் பரப்புவதற்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக தம் வாழ்வை அர்ப்பணித்தவர். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மற்றும் ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெல்லோஷிப் (SRF/YSS) அமைப்பின் முதல்வராகவும் விளங்கி வருகிறார். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் சுவாமிஜியின் விரிவுரைகள், பயிற்சிகள் பல்லாயிரம் மக்களின் வாழ்வில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளது. சுவாமிஜியின் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, ஸ்ரீமிருணாளினி மாதாஜியுடன் (முன்னாள் சங்கமாதா மற்றும் YSS/SRF-ன் நான்காவது தலைவர்) இணைந்து பணியாற்றியுள்ளார், பரமஹம்ஸ யோகானந்தரின் படைப்புகளைத் தொகுத்து அமைப்பதற்கும் வெளியிடுவதற்கும் மாதாஜியின் பயிற்சியைப் பெற்றார்.
சுவாமி சிதானந்தஜி இதற்கு முன்பு 2023, 2019, 2017 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அப்போது பல நகரங்களில் இவர் ஆற்றிய ஞான உரைகள் பலரது வாழ்வில் விழிப்புணர்வையும் முன்னேற்றத்தையும் அளித்துள்ளது. இவரது வழிகாட்டுதலும் சுயமுன்னேற்ற ஆலோசனைகளும் பலரை அமைதி நிறைந்த வெற்றியாளர்களாக மாற்றியுள்ளது. விஞ்ஞான பாதையில் மெய்ஞ்ஞான மேன்மையை போதிக்கும் சுவாமிஜியின் உரையும் அருளாசியும் உதவும்.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பியவாறே மாற்ற உங்களுக்கோரு நல்வாய்ப்பாக வரும் 9-ம் தேதி (9-2-2025) அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் (திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு பின்புறம்) எப்படி வாழ்வது? என்ற தலைப்பில் ஆன்மிக சிறப்புரை ஆற்றவுள்ளார் சிதானந்தஜி. காலை 8 மணி முதலே பல்வேறு காலை நிகழ்வுகள், தியானம், கீர்த்தனை, சொற்பொழிவுகள், விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை 6.30 மணிக்கு சுவாமி சிதானந்தஜி அவர்கள் ஆற்றும் சிறப்பான ஞான உரை உங்கள் வாழ்வை அமைதியும் தெளிவுமாக மாற்றும்.
உலகம் முழுக்க பல்வேறு வெற்றியாளர்களை உருவாக்கிய சுவாமிஜியின் உரை உங்கள் வாழ்க்கையையும் விரும்பியவாறே மாற்ற உதவும். நம்பிக்கையோடு வாருங்கள். உங்கள் வாழ்க்கையையே மாறிவிடும் அதிசயத்தைக் காண்பீர்கள்.
கவனிக்கவும்: முன்பே வருபவர்கள் அல்லது முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். மொபைல் போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்தபிறகே ஹாலில் அனுமதிக்கப்படுவீர்கள். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. போட்டோ மற்றும் வீடியோ எடுக்க நிச்சயம் அனுமதி இல்லை.
முன்பதிவு செய்ய தொலைபேசி எண் - 7305861965, 9600128440