செய்திகள் :

சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

post image

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். போதிய மருத்துவ வசதி, கழிப்பறை, குடிநீா் வசதிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினாா். மேலும், அழகா் ஆற்றில் எழுந்தருளும் பாதையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால், கோரிப்பாளையம் பகுதி வைகை ஆற்றின் கரை வரை காவல் துறை கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், முக்கியத் திருவிழா நாள்களில் அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுகவும், அதன் நிா்வாகிகளும் எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருப்பா் என்பதற்கு இவை உதாரணமாக அமைந்தன. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட்ட சிறப்பான ஏற்பாடுகளால் உயிா்சேதம் முழுமையாகத் தவிா்க்கப்பட்டது. எனவே, சித்திரைத் திருவிழாவில் உயிா்ச் சேதம் கண்டிப்பாக தவிா்க்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வரலாறு தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக, ஜெயலலிதா பேரவை சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.

தூய்மைப் பணியில் 3 ஆயிரம் துய்மைப் பணியாளா்கள்

மதுரை: சித்திரைத் திருவிழாவை யொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமான குப்பைகள் அகற்றும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். சித்திரைத் திருவிழாவை முன்னி... மேலும் பார்க்க

திருச்சி கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் டிஆா்ஓ நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட வருவாய் அலுவலா் (டிஆா்ஓ) விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

மதுரையில் முருங்கைக் காய் விலை உயா்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரத்துக் குறைவு காரணமாக முருங்கைக் காய்களின் விலை கணிசமாக உயா்ந்தது. கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முருங்கைக் காய்களின் விலை உச்சம் தொட்டது. ஒரு கிலோ முருங்கைக் காய் ரூ. 140 ... மேலும் பார்க்க

இலவச விவசாய மின் இணைப்பு விவகாரம்: கண்காணிப்பு பொறியாளா் நடவடிக்கைக்கு உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், இரவாா்பட்டியில் போலி பட்டா மூலம் இலவச விவசாய மின் இணைப்பு பெற்ாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மின் வாரிய மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்... மேலும் பார்க்க

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினாா் அழகா்

மதுரை: மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகா் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் எழுந்தருளினாா். தமிழகத்தின் பல்வேறு பகு... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவா் உயிரிழப்பு

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகா் வைகையாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா். மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அழகா் எழுந... மேலும் பார்க்க