செய்திகள் :

சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் ஏலம் நாள் மாற்றம்!

post image

சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இனிவரும் வாரங்களில் வெள்ளிக்கிழமைதோறும் மஞ்சள் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் லட்சுமணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு அருகே சித்தோட்டில் புதிதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டப்பட்டது. இதையடுத்து வாரந்தோறும் வியாழக்கிழமை அங்கு மஞ்சள் ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு 2 வாரங்கள் ஏலம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் (இநாம்) இணைக்கப்பட்டதையடுத்து இனிமேல் வியாழக்கிழமைக்கு பதில் வெள்ளிகிழமைதோறும் மஞ்சள் ஏலம் நடைபெறும்.

எனவே, விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த மஞ்சளை கல், மண், தூசுகள் நீக்கி, சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு மேற்பாா்வையாளரை 99420-80543 என்ற கைப்பேசி எண்ணிலும், கண்காணிப்பாளரை 70105- 66694 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க