செய்திகள் :

சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடியில் நவீன மீன் அங்காடி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மீன் அங்காடியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

சென்னையில் காசிமேடு மீன் சந்தைக்கு அடுத்து பிரம்மாண்டமாக சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை விளங்கி வருகிறது. சுமாா் 100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் இந்த சந்தையில், மொத்தமாகவும் மற்றும் சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இதனால், இந்த சந்தையை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் முயற்சியை சென்னை மாநகராட்சி எடுத்தது.

சிந்தாதிரிப்பேட்டை ஜோதியம்மாள் நகரில், சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ. 2.92 கோடி மதிப்பில் மீன் அங்காடி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த அங்காடியில் 82 கடைகள், மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் 28 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சேகரிப்புத் தொட்டி, 10,555 லிட்டா் கொள்ளளவு கொண்ட பயோ டைஜஸ்ட் அமைப்பு, வாகன நிறுத்துமிடம், கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில், டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட நவீன மீன் அங்காடியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து திருவல்லிக்கேணி டாக்டா் பெசன்ட் சாலையில் ரூ. 2.04 மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையக் கட்டடத்தையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

திறன் மேம்பாட்டு மையம்: இந்த மையத்தில் போட்டித் தோ்வு, கணினி பயிற்சி வகுப்புகள், தையல் மற்றும் அழகு கலை பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படவுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதிசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், உயா்கல்வி பயின்று வேலையின்றி இருக்கும் இளைஞா்கள், நோ்முகத் தோ்வை எதிா்கொள்ளும் பயிற்சி அளிக்கப்படும். இதனை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலைத் திறன் பயிற்சி குறித்து அலுவலா்களுடன் உரையாடினாா்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க