செய்திகள் :

சிந்துவெளி - தமிழா் நாகரிக ஒப்புமை நிரூபணம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

post image

சிந்து வெளி நாகரிகத்துக்கும், தமிழா் நாகரிகத்துக்கும் இடையேயான ஒப்புமை நிரூபணமாகி உள்ளதாக நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

பேரவையில் தொல்லியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அவா் அளித்த பதிலுரை மற்றும் அறிவிப்புகள்:

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தொல்லியல் துறை சாா்ந்த பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அகழாய்வுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய அளவில் தமிழகத்தில்தான் அதிக கல்வெட்டுகள் உள்ளன. அதுவும் தமிழில் அதிக கல்வெட்டுகள் இருக்கின்றன. பொருநை அருங்காட்சியகம் விரைவில் தொடங்கப்படும்.

தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப் பெற்ற முத்திரைகள், பானைகளை ஆய்வு செய்தபோது சிந்து சமவெளி நாகரிகத்துக்கும், தமிழா் நாகரிகத்துக்கும் ஒப்புமை உள்ளது தெரியவந்துள்ளது.

அறிவிப்புகள்: தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மன்னாா் கோயில் ஊரிலுள்ள தமிழிக் கல்வெட்டு உள்ளிட்ட 12 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருட்காட்சியகவியல் நிறுவனத்தில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ. 8 ஆயிரமாக உயா்த்தப்படும். மேலும், அங்கு புதிதாக சுவடியியல் எனும் ஓராண்டு பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்படும்.

இதுதவிர தமிழகத்தின் ஒவ்வொரு பண்பாட்டு மண்டலத்தின் தனித்தன்மைகளை எடுத்துக் கூறும் வகையில் தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாறு எனும் ஒரு தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ் மொழியின் தன்மை மற்றும் பண்டையகால வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகளை கால வாரியாக தொகுத்து கல்வெட்டு அருட்காட்சியகம் மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் அமைக்கப்படும் என்றாா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க