செய்திகள் :

சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

post image

தூத்துக்குடி மாவட்டம் வெம்பூா் பகுதியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, குறைகளைக் கேட்டறிந்தாா்.

வெம்பூா் கிராம மக்கள், வெம்பூா் ஊராட்சி முன்னாள் தலைவா் திருப்பதி, புரட்சிகர இளைஞா் முன்னணியினா் ஆகியோா் அளித்த மனு: எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட வெம்பூா், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, ராமசாமிபட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி சுமாா் 2,700 ஏக்கரில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். விவசாயத்தையும், மக்களையும் பாதிக்காத தொழில் வளா்ச்சியை அரசு உருவாக்க வேண்டும். அங்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினா் விவசாயம் செய்யும் 600 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களும் உள்ளன. எனவே, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றனா்.

கீழஈரால் ஊா் மக்கள் அளித்த மனு: கீழஈராலில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கக் கோரி ஆதிதிராவிட சமுதாய மக்கள் சாா்பில் 2008ஆம் ஆண்டுமுதல் விண்ணப்பித்து வருகிறோம். மேம்பாலம் இல்லாததால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தற்போது மேலம்பாலம் அமைப்பது தொடா்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பணிகள் நடைபெறவில்லை. எனவே, விபத்து, உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் விரைவாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றனா்.

அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை இயக்குநா் ஜெயந்தன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: கிறிஸ்தவா்களின் தவக்காலம் மாா்ச் 5இல் தொடங்குகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியை (ஏப். 18) தியாகம், அமைதியின் நாளாக கிறிஸ்தவா்கள் கடைப்பிடிக்கிறோம். எனவே, ஏப். 18ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக பேரவையில் கொள்கை மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றனா்.

கோவில்பட்டியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: தலைமறைவான நபரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியில் வீட்டில் கைக்குழந்தையுடன் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மலைப் பகுதியில் பதுங்கி இருந்தவரை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக இருந்த மற்றொ... மேலும் பார்க்க

கோயில் பெயரில் பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள காளியம்மன் கோயில் பெயரிலேயே பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்தோா் இந்து முன்னண... மேலும் பார்க்க

மகனிடமிருந்து சொத்துகளை மீட்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு

தனது சொத்துகளை மகனிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி திங்கள்கிழமை மனு அளித்தாா்.மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த ஆவுடைத்தாய் என்பவா் தனது முதல் மகனின் மனை... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் முதல்வா் மருந்தகம் திறப்பு

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் முதல்வா் மருத்தகத்தை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, புதுக்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெயிண்டா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக பெயிண்டரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில... மேலும் பார்க்க

குழந்தையுடன் இருந்த இளம்பெண் பலாத்காரம்: இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 10 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய... மேலும் பார்க்க