சிம்பு - 49 படத்தில் இணைந்த கயாது லோஹர்!
நடிகர் சிம்புவின் 49-வது படத்தில் நடிகை கயாது லோஹர் இணைந்துள்ளார்.
நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக இந்தப் படத்துக்கு ’எஸ்டிஆர் - 49’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தினை இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். நீண்ட காலம் கழித்து சந்தானமும் காமெடியனாக இப்படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் நாயகியாக நடிகை கயாது லோஹர் இணைந்துள்ளதைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.