செய்திகள் :

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

post image

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின் தென்மேற்கு பகுதிகளின் மீது நேற்று (ஏப்.2) இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் அப்பகுதியில் வசித்த சாதாரண மக்கள் என்று சிரியா அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், பலியானவர்களைப் பற்றிய முழுமையானத் தகவல்கள் தெரிவிக்கப்படாத நிலையில் அவர்கள் அனைவரும் தாரா மாகாணத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய உள்ளூர்வாசிகள் என பிரிட்டனைச் சேர்ந்த போர் கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது.

இதனிடையே, சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவுடன் துருக்கி அரசு கூட்டமைத்து அந்நாட்டின் ஹமா நகரத்தை முக்கிய ராணுவத் தளமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சிரியாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்ற துருக்கி முயற்சித்து வருவதாக இஸ்ரேல் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன் சார் கூறுகையில், சிரியாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக உருமாற்ற துருக்கி முயன்று வருவதாகவும், சிரியா ஈரான் அல்லது துருக்கியின் பிரதிநிதியாக இருப்பது நல்லது இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு துருக்கி அதிகாரிகள் தரப்பிலிருந்து தற்போது வரை எந்தவொரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இடைக்கால அரசு அமைந்ததிலிருந்து, அந்நாட்டின் தென் மேற்கு பகுதிகளை தங்களது பாதுகாப்பிற்காக இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றி பாதுகாப்பு மண்டலமாக உருவாக்கியுள்ளது.

மேலும், கடந்த மார்ச் மாதம் அம்மாகாணத்தின் கொவாயா கிராமத்தில் விவசாய நிலங்களின் வழியாகக் கடக்க முயன்ற இஸ்ரேல் ராணுவத்துக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

பாஜக பின்பற்றுவது இந்து மதமல்ல: ராகுல் கண்டனம்!

ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்கு பின்பு ராமர் கோயிலில் கங்கை நீர் ஊற்றி கழுவப்பட்ட விவகாரத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று!

உத்தரகண்ட் மாநிலத்தின் சிறையில் 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது.ஹரிதுவார் மாவட்ட சிறையில் அடைக்கப்பட அழைத்து வரப்பட்ட புதிய சிறைக் கைதிகளுக்கு கடந்த ஏப்.7 அன்று மருத்த... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கிய மொழியில் உபநிஷதுகள் பரிசளிப்பு!

ஸ்லோவாக்கியா சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கிய மொழிப்பெயர்ப்பில் உபநிஷதுகளை அந்நாட்டு அதிபர் பரிசளித்துள்ளார்.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்... மேலும் பார்க்க

18 அமெரிக்க டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக யேமனின் ஹவுதி படை அறிவிப்பு!

கடந்த 2023-ம் ஆண்டு முதல் 18 அமெரிக்க அதிநவீன டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் அறிவித்துள்ளனர். யேமன் நாட்டின் அல்-ஜாவ்ஃப் மாகாணத்தின் மீது கடந்த ஏப்.3 அன்று பறந்த... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: பள்ளிக்கூடத்தில் மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.கோடெர்மா மாவட்டத்தின் லால்காபானி கிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இன்று (ஏப்.9) மதியம் வகுப்பு ... மேலும் பார்க்க

காஸாவில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 23 பேர் பலி!

காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காஸாவின் ஷிஜாயா பகுதியிலுள்ள 4... மேலும் பார்க்க