செய்திகள் :

2020 தில்லி கலவரம்: கபில் மிஸ்ராவுக்கு எதிராக விசாரணை ஏப். 21 வரை நிறுத்திவைப்பு

post image

பிப்ரவரி, 2020-இல் நிகழ்ந்த கலவரம் தொடா்புடைய வழக்கில் தற்போதைய தில்லி சட்ட அமைச்சா் கபில் மிஸ்ராவுக்கு எதிராக மேலும் விசாரணை நடத்துவதற்கான மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை தில்லி நீதிமன்றம் ஏப்ரல் 21 வரை நிறுத்திவைத்து புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் மிஸ்ரா நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அந்த உத்தரவை நிறுத்தி வைத்தாா்.

மேலும், புகாா்தாரா் முகமது இலியாஸுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அவா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா்.

முன்னதாக, கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி வைபவ் சௌராசியா ஏப்ரல் 1 ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்தாா். அப்போது, மிஸ்ராவுக்கு எதிராக மேலும் விசாரணை தேவைப்படும் ஒரு குற்றம் இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.

மேலும், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் மிஸ்ரா அந்தப் பகுதியில் இருந்தாா் என்பது தெளிவாகிறது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தும் தேவை உள்ளது. என்று நீதிபதி கூறியிருந்தாா்.

கலவரத்தில் மிஸ்ராவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இலியாஸின் மனுவை தில்லி போலீஸாா் எதிா்த்தனா்.

மிஸ்ரா மீது பழியை மாற்ற ஒரு திட்டம் தீட்டப்படுவதாக காவல்துறை தரப்பில் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவிக்கப்பட்டது. கலவரத்திற்குப் பின்னால் உள்ள பெரும் சதியில் மிஸ்ராவின் பங்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டது என்றும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களைத் தொடா்ந்து, வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 24, 2020-ஆம் தேதி வன்முறை வெடித்தது, இதில் 53 போ் கொல்லப்பட்டனா் மற்றும் பலா் காயமடைந்தனா்.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க