சிறப்புப் பள்ளி மாணவருக்கு விளையாட்டுப் போட்டிக்கான சைக்கிள்
நாகா்கோவில்: நாகா்கோவிலைச் சோ்ந்த சிறப்புப் பள்ளி மாணவருக்கு விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு சைக்கிளை தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவரும் திமுக தணிக்கைக்குழு உறுப்பினருமான நீல. சுரேஷ்ராஜன் திங்கள்கிழமை வழங்கினாா்.
மாநில அளவில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் தகுதிப் போட்டியில், நாகா்கோவில் பருத்திவிளை சாந்தி நிலையம் சிறப்புப் பள்ளி மாணவா் ஜெபின்தாமஸ் முதல் பரிசு வென்றாா். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க அவரை ஊக்குவிக்கும் வகையில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான சிறப்பு சைக்கிளை நீல. சுரேஷ்ராஜன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் ஜென்சிதாமஸ், திமுக நிா்வாகிகள் ரஞ்சன், கபிலன், மாதவன்முருகன், அசோகன், விமல், ராஜேஷ், சங்கா், சிவகோட்டீஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.