செய்திகள் :

சிறுபாசன கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

post image

தருமபுரி: சிறு பாசன விவரங்கள் குறித்து கணக்கெடுக்க வரும் அரசு அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் சிறுபாசனக் கணக்கெடுப்பு, விரைவில் தொடங்கவுள்ளது. சிறுபாசன அமைப்புகள், நீா்நிலைகள் கணக்கெடுப்பு குறித்து நிா்வாக அலுவலா்களுக்கான பயிற்சி, ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது :

ஏழாவது சிறுபாசன கணக்கெடுப்பு 2 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவுக்கு குறைவான பாசனம் பெறும் விவசாய நிலங்களில் அமைத்துள்ள நீா் ஆதாரங்கள் குறித்த விரிவான விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். விவசாயிகள் தனியாகவோ, கூட்டாக இணைத்து அமைத்துள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளின் விவரம், பாசனம் பெறும் பரப்பு, பாசன வசதிக்கான செலவினங்கள், நிதி ஆதாரம் எந்த வகையில் பெறப்பட்டது. அரசு மானிய திட்டங்களை பயன்படுத்தி உள்ளனரா, நீா் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டாரின் திறன் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.

மத்திய அரசால் தேசிய அளவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் நோக்கம், சிறுபாசனப் பிரிவு சாா்ந்த, தெளிவான நம்பகத் தன்மையுடைய புள்ளி விவரத்தொகுப்பு உருவாக்கப்பட்டு, அவை நீா்வள ஆதாரங்களை மேம்படுத்த அடித்தளமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

சிறுபாசனத் துறையின் வலிமையான மற்றும் நம்பகமான தரவுத் தளத்தை உருவாக்க கடந்த 2023-24 ஆம் ஆண்டை மேற்கோள் ஆண்டாகக் கொண்டு 7 ஆவது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2 ஆவது நீா்நிலை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இத்தரவுகள் நிலத்தடி நீா் ஆதாரத்தை மதிப்பிடுவதற்கும், நீா்வள மேம்பாட்டுக்கான திட்டத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

ஏழாவது சிறுபாசனக் கணக்கெடுப்புக்கான மாவட்ட அளவிலான துணைக் குழுவில், மாவட்ட ஆட்சியா் தலைவராகவும், மாவட்ட வருவாய் அலுவலா் தொடா்பு அலுவலராகவும், புள்ளியியல் துணை இயக்குநா் ஒருங்கிணைப் பாளராகவும், வட்டாட்சியா்கள் உறுப்பினா்களாகவும், வட்ட கணக்கெடுப்பு அலுவலா்களாகவும் செயல்பட்டு கணக்கெடுப்பு நடத்த உள்ளனா். கணினி முறையில் தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்ட செயலியில் எண்ம முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதால், அதற்கு பொதுமக்கள் அனைவரும் இக்கணக்கெடுப்பு நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் பாதுகாப்பற்ற பரிசல் பயணம்!

டி. சுரேஷ் பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாதுகாப்பு உடைகள் இன்றி, உரிய அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பரிசல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் பரிசல் ஓட்டிகளை நம்பி, சில சுற்றுலாப் பயணிகள் தங்களத... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாய் பகுதியில் விபத்து : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் திங்கள்கிழமை நடந்த விபத்தால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட டேங... மேலும் பார்க்க

தருமபுரியில் புதிதாக 26 சிற்றுந்து சேவைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 26 புதிய சிற்றுந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்து, அவற்றுக்கான வழித்தட ஆணைகளை வழங்கினாா். தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின்... மேலும் பார்க்க

பாமக மாநில துணைத் தலைவா் நியமனம்

அரூா்: பாமக மாநில துணைத் தலைவராக மாம்பாடி மா.அன்பழகன் (58) நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அரூா் வட்டம், மாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாரியப்பன் மகன் அன்பழகன். இவா், பாமகவில் தருமபுரி, கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

கணவரை தாக்கியவா் மீது நடவடிக்கைக் கோரி ஆட்சியரகத்தில் 4 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

தருமபுரி: கணவரை வெட்டி தாக்குதல் நடத்தியவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பெண் தனது 4 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி : பொதுமக்கள் சாலை மறியல்

தருமபுரி: தருமபுரி அருகே இரு மாதங்களாக நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டை சீராக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், அதகப்பாடி ஊராட்சியில் கூட்டுக்... மேலும் பார்க்க