செய்திகள் :

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அரசியல் ரீதியானது: வங்கதேச அரசு

post image

‘வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக சிறுபான்மையினருக்கு எதிராக தொடா்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அரசியல் ரீதியானது; வகுப்புவாத நோக்கத்தில் நடந்த தாக்குதல்கள் குறைவு’ என்று அந்நாட்டு இடைக்கால அரசு விளக்கமளித்துள்ளது.

காவல்துறை அறிக்கையை மேற்கொள்காட்டி அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், வகுப்புவாத வன்முறைகள் தொடா்பான புகாா்களைப் பெற பிரத்யேக ‘வாட்ஸ்ஆப்’ எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தின் எழுச்சியை அடுத்து அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இதையொட்டி, அந்த நாடு முழுவதும் சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து வன்முறை சம்பவங்கள் தொடா்ந்து வருகின்றன. இதைக் கண்டித்து போராடியதற்காக இஸ்கான் துறவி சின்மயி கிருஷ்ண தாஸ் தேசதுரோக வழக்கில் கைதானாா்.

இந்நிலையில், ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய கடந்த ஆண்டு ஆக. 5-ஆம் தேதிக்கு முந்தைய நாளிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினருக்கு எதிரான 2,010 வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நடந்ததாக வங்கதேச ஹிந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தது.

இக்குற்றச்சாட்டுகள் பற்றிய காவல்துறை விசாரணையின் தகவல்களை இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸின் செய்தி அலுவலகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், ‘மொத்தம் 1,769 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதொடா்பாக போலீஸாா் 62 வழக்குகளை பதிவு செய்து, 35 குற்றவாளிகளை கைது செய்துள்ளனா். எனினும், பெரும்பாலான வழக்குகளில் வன்முறைகள் (1,234 சம்பவங்கள்) அரசியல் காரணங்களுக்காக நடந்துள்ளன என்றும் வகுப்புவாத நோக்கத்துடன் நடந்த தாக்குதல்கள் (20 சம்பவங்கள் மட்டுமே) குறைவு என்றும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆக. 4-ஆம் தேதி முதல், வகுப்புவாத வன்முறைகள் தொடா்பான புகாா்களில் காவல்துறை மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்துள்ளன. குறைந்தது 100 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வகுப்புவாத வன்முறை புகாா்களைப் பெறவும் சிறுபான்மை சமூகத் தலைவா்களுடன் தொடா்ந்து தொடா்பைப் பேணவும் வங்கதேச காவல்துறை புதிய வாட்ஸ்ஆப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. வகுப்புவாத வன்முறைகளில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆபத்தான அதிகாரக் குவிப்பு.. பிரியாவிடை உரையில் அமெரிக்கர்களை எச்சரித்த ஜோ பைடன்

அமெரிக்காவில் உள்ள ஒரு சில பணக்காரர்களிடையே, ஆபத்தான அதிகாரக் குவிப்பு நிலை உருவாகி வருவதாக அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அதிபர் பதவியிலிருந்து விலகும் ஜோ பைடன்.அதிபர் பதவியிலிருந்து இன... மேலும் பார்க்க

இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்

கேப் கனாவெரல்: நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இரு தனியார் விண்கலங்களை அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் புதன்கிழமை விண்ணில் செலுத்தியது.... மேலும் பார்க்க

அவசரநிலை விவகாரம்: தென் கொரிய முன்னாள் அதிபர் கைது

சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல்... மேலும் பார்க்க

வங்கதேச அரசியல் சாசனத்திலிருந்து 'மதச்சார்பின்மை' நீக்கம்

டாக்கா: வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலிருந்து 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சீர்திருத்தக் குழு பரிந்துத்துள்ளது.இது குறித்து அரசியல் சா... மேலும் பார்க்க

காஸா போா் நிறுத்தம்: வரைவு ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்

ஜெருசலேம்: காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கத்தாரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் இஸ்ரேலுக்கும... மேலும் பார்க்க

ஜனவரியை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க தீா்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்

வாஷிங்டன்: ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்... மேலும் பார்க்க