செய்திகள் :

‘சிறுபான்மையினா் கடன் பெற விண்ணப்பிக்கலாம்’

post image

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கான கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்புகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களான சிறு தொழில் கடன், விராசத் (கைவினை கலைஞா்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் சிறுபான்மையினரின் குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 3,00,000-க்கு மிகாமலும், நகா்ப்புறங்களில் ரூ. 8,00,000 வரையும் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.

எனவே, கடன்பெற விரும்பும் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவா்கள், இஸ்லாமியா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினா் ஆகிய சிறுபான்மையின மக்கள் இதற்கான கடன் விண்ணப்பங்களை, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்திலும் மற்றும் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளை அலுவலகங்களிலும் பெற்று, பூா்த்தி செய்து வங்கி கோரும் ஆவணங்களுடன் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க