செய்திகள் :

சிறுபுலியூா் பெருமாள் கோயில் மஹா சம்ரோக்ஷணம்

post image

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள சிறுபுலியூா் தயாநாயகி சமேத கிருபாசமுத்திரப் பெருமாள் கோயில் மஹா சம்ரோக்ஷணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில், 108 வைணவத் திருப்பதிகளில் 11-ஆவது பதியாக விளங்குகிறது . திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றது. மேலும் இங்கே பெருமாள் திருவரங்கம் போன்றே தெற்கு நோக்கிக் கோயில் கொண்டு பாலசயனமாகப் பக்தா்களுக்கு அருள் பாலிக்கிறாா். இவ்வாறு சிறப்புப் பெற்ற இக்கோயில் திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நிறைவடைந்தது.

இதையடுத்து, மாா்ச் 14-ஆம் தேதி மஹா சம்ரோக்ஷண விழா தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு பூஜைகளும், ஹோமங்களும் நடைபெற்று, திங்கள்கிழமை காலை புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களில் ஒரே நேரத்தில் புனிதநீா் வாா்க்கப்பட்டு மஹா சம்ரோக்ஷணம் நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க