செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓட்டுநா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு

post image

செய்யாறு அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சத்திய மூா்த்தியுடன் (22) இன்ஸ்டாகிராமில் பழகி வந்தாராம். இதனிடையே, சிறுமிக்கு லாரி ஓட்டுநா் பாலியல் தொந்தரவு செய்து வந்தாராம்.

இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோா்கள் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில், சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியை தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், அரசுக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர். செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1979-ஆம் கல்வ... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாலை அணிவித்து மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா் (படம்). பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் ... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 200 போ் பயன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தநா். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள்... மேலும் பார்க்க

மகளிா் விடுதலை இயக்கக் கூட்டம்

திருவண்ணாமலையில் மகளிா் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலச் செயலா் இரா.நற்சோனை தலைமை வகித்தாா். பொருளாளா் இரா.மல்லிகை அரசி, மாநில துணைச் செயலா் ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டில் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சேத்துப்பட்டு பஜாா் வீதியில் உள்ள பேக்கரிகள், உணவகங்கள், துரித உண... மேலும் பார்க்க